Metti Oli Serial: மெட்டி போடும்போதுதான் கணவன் மனைவியை...!
சென்னை: சன் டிவியின் மெட்டி ஒலி சீரியல் சும்மா கிடந்த சன் டிவியின் இரவு 7:30 மணி நேர ஸ்லாட்டை உயரத்தில் தூக்கி வைத்த தொடர். அன்றைய காலக்கட்டத்தில் ரேட்டிங்கில் நல்ல இடம் பிடித்து ஒளிபரப்பாகி வந்தது மெட்டி ஒலி சீரியல்.
கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் மெட்டி ஒலி சீரியல், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1 மணி முதல் 1:30 மணி வரை மறு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த மறு ஒளிபரப்பிலும் மெட்டி ஒலி சீரியலை பலரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
மெட்டிஒலி தலைப்புக்கு ஏற்ப, மனைவி சரோவுக்கு முத்துக்கள் வைத்த வெள்ளி மெட்டி வாங்கித் தருகிறான். அப்போதுதான் சரோ சொல்கிறாள், ஒரு கணவன் மெட்டி போட்டு விடுவது மூலமாத்தான் தனது பெண்டாட்டியை முதன் முதலில் தொடுகிறான் என்று.
யாரோ 10 பேர அடிச்சி டான் ஆகல.. அடிச்ச 10 பேருமே டான்தான்.. கேஜிஎப் ராக்கியும்.. முத்தப்ப ராயும்!
மெட்டி திரைப்படம்
இயக்குநர் மகேந்திரன் சார் இயக்கத்தில் மெட்டி என்று ஒரு படம். திருமணம் ஆன பெண்கள் அணியும் அணிகலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். அதில் மெட்டிஒலி பற்றி இளையராஜா ஒரு பாடல் பாடி இருப்பார். அப்போதில் இருந்தே இந்த மெட்டி என்பது கலைநயமிக்க ஒரு அணிகலன் என்றும் மாறிப்போனது.
மெட்டிஒலி சீரியல்
இயக்குநர் திருமுருகன் அதே போல் மெட்டிஒலி என்று சீரியலுக்குப் பெயர் வைத்து, அது சன் டிவியில் ஒளிபரப்பாகத் துவங்கியபோது, மக்கள் மிக எதிர்பார்ப்புடன் சீரியலை பார்க்க ஆரம்பித்து இருந்தனர். நாளடைவில் 7:30 மணி ஆனால் எல்லார் வீட்டிலும் மெட்டிஒலி பாடல்தான் ஒளிபரப்பானது.அப்படி ஆர்வமுடன் மக்கள் சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.
மெட்டி அர்த்தம்
திருமணம் முடிந்த கையோடு மணமகள் காலில் மணமகன் மெட்டி போட்டு விடும் வைபவம் நடக்கும். இதற்கான அர்த்தத்தை வேறு வேறு விதமாக பலரும் சொல்வார்கள். இதில் கணவன் தனக்கு முதன்முதலாக மெட்டி வாங்கித் தர. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என்று சொல்கிறாள் சரோ. அதோடு, மெட்டியை கணவன் அணிந்து விடுவதற்கான காரணத்தையும் சொல்கிறாள்.
முதன் முதலில் தொடுவது
கணவன் கல்யாணம் ஆன கையோடு மெட்டி போட்டுவிடறப்போதான், மனைவியை முதன் முதலில் தொடுகிறான் என்று ஒரு காரணம் சொல்லி, இதனால் இந்த மெட்டி எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குங்க என்று கணவன் மாணிக்கத்திடம் சொல்கிறாள். இது கூட நல்லாத்தான் இருக்கு.