Chithi 2 Serial: ஓஹோ...இதனால்தான் இவங்க சித்தியா ?... சித்தி 2 இன்ட்ரஸ்டிங்...!
சென்னை: சன் டிவியின் சித்தி 2 சீரியலில் வெண்பாவுக்கு சாரதா சித்தியானதுதாங்க சுவாரஸ்யமான கதை. வெண்பா ஒரு அனாதை அனாதைன்னு லட்சுமி சொல்லிக்கொண்டே இருக்க... புதிருக்கான விடை கிடைச்சுருச்சு.
Recommended Video
22 வருஷத்துக்கு முன்னாடி சாரதாவுக்கு பிறந்த குழந்தையை கவின் தாய்மாமா தூக்கிகிட்டு ஓடிடறார். அவருக்கு பிறந்த குழந்தை இறந்து போச்சுன்னு நினைச்சு குழந்தையை மாத்திடறார்.
கடைசியில் மழைத் துளி பட்டு குழந்தைக்கு உயிர் வந்துருது. அந்த குழந்தையை நீதான் வளர்க்கணும்னு சித்தர் சொல்றார் பெற்றாலும் நீ சித்திதான்.. இந்த ஜென்மத்தில் நீ சித்திதான்னு சொல்லிட்டு போயிடறார்.
சித்தர்கள் சீசன்
ராதிகா சரத்குமாரின் அண்ணாமலை சீரியலில் சித்தர் ஒருவர் அடிக்கடி வருவார். அதே போல சித்தி 2 விலும் ஒரு சித்தர் வந்து இருக்கார். ஆனால் பல சானல்களின் சீரியல்களில் சித்தர்கள் அடிக்கடி வந்து அருள்வாக்கு சொல்வது என்பது நடந்து வருகிறது. சிலர் வாழக்கையில் இப்படி சித்தர்கள் தோன்றி மறைவது நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. சீரியல்களில் இப்படி பார்த்து பார்த்து சித்தர் நம்பிக்கையாவது மக்கள் மனதில் விதையாக விழட்டும்.
இது மிஸ்டேக்தானே
சித்தி 2 நேற்றைய எபிசோடில் இது மிஸ்டேக்தானே என்று கேட்கும்படி, பொன்வண்ணன் ஃபிளாஷ்பேக் சொல்கிறார். அதாவது வெண்பா நான் யாரு சித்தின்னு கேட்கும்போது இதை சொல்ல ஆரம்பிக்கிறார் பொன்வண்ணன். அப்போது கார் விபத்துக்கு உள்ளாகி எல்லாரும் மயக்கத்தில் இருக்கும்போது கவின் தாய் மாமா பார்க்கிறார். அதை அப்படியே நமக்கு காண்பிப்பது ஏன்? எல்லாரும் மயக்கத்தில் இருந்தோம் என்று ஃபிளாஷ்பேக் சொல்லும்போது, அவர் முகமும் இவர்களுக்குத் தெரியாத நிலையில், அதை எப்படி நமக்கு பொன்வண்ணன் சொல்ல முடியும்.
கவினின் தாய் மாமா
கவினின் தாய் மாமா வருவதும், இறந்து போன தனது குழந்தையை ராதிகாவின் மடியில் வைத்துவிட்டு, ராதிகா குழந்தையை தான் எடுத்துக்கொள்வதும் என்று வியூவர்ஸுக்கு தெரியும்படி வைப்பது என்பதும், இவர்களுக்கு யார் என்று தெரியவில்லை என்பதும் ஃபிளாஷ்பேக்கில் இவர்கள் சொல்லும்போது தெரிய வைக்கக் கூடாது. இது மிஸ்டேக் இல்லையா?
சித்தி 2 பயணம்
ராதிகா குழந்தை பெற்றாலும் சித்திதான் என்று சாரதா சித்தி ஆன கதையை நன்றாக சொல்லி இருக்கிறார்கள். இது போன்ற அரிதான நேரங்களில் சித்தர் வந்து வாக்கு சொல்வது என்பது நம்பும்படி இருக்கிறது. என்ன.. சித்தரும் வந்து ஹாஹா என்று அடுக்கடுக்காய் எப்போதும் போல சிரிப்பதை இப்போதும் காண்பித்து இருப்பது நன்றாக இல்லை.