தமிழ்செல்வி சொன்ன பொய் மாமாவுக்கு தெரிஞ்சு போச்சே... என்ன செய்யப்போறா?
சென்னை: சன் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ்செல்வி சீரியலில் நடிக்கும் பெண் பெயருக்கு ஏற்ற மாதிரி சிரிச்ச முகத்துடன் அழகாக இருக்கிறார்.
ஒரு கிராமத்தில் பெரும் விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், குடும்பத்துக்கே படிப்பு வாசனை அவ்வளவாக இல்லை.
பன்னிரண்டாம் வகுப்புடன் அந்த ஊரில் பள்ளிக்கூடம் முடிந்து விடுகிறது.கல்லூரி படிக்க வேண்டும் என்றால் வெகு தூரம் செல்லவேண்டும். வீட்டு செல்லப் பெண் வேற...அவ்ளோ தூரம் படிக்க அனுப்புவாங்களா?
மாமாவுடன் கல்யாணம்
பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சை எழுதி இருக்கும் போதே தமிழ்செல்விக்கு மாமனுடன் கல்யாணம் பண்ணிவைக்க முடிவு செய்து, கல்யாண மேடைக்கும் வந்துடறா. அவள் மனசுக்குள் கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்கிற ஆசை கொழுந்துவிட்டு எரிகிறது. பள்ளியில் தமிழ்ச்செல்வி உறுதி மொழி எடுத்துக் கொண்டதும், தான் மாவட்ட ஆட்சியராக ஆக வேண்டும் என்றுதான்.
வலிப்பு மாதிரி நடிப்பு
மணமேடைக்கு வரும்போதே தனக்கு வலிப்பு வந்த மாதிரி நடிச்சு, டாக்டரிடமும் தன் படிக்கும் ஆசையை சொல்லிடறா தமிழ்செல்வி.இன்னும் ஐந்து வருஷத்துக்கு பாப்பாவுக்கு கல்யாணம் செய்யக் கூடாது.அதுவரைக்கும் வேணா ஆசைப்பட்டதை படிக்க வைங்கன்னு சொல்லிடறார்.
தமிழ்செல்வியும் பாட்டியும்
பாட்டியும், தமிழ்செல்வியும் கோயிலில் கல்யாணத்தை நிறுத்த பொய் சொன்னது பற்றி பேசிக்கொண்டு இருந்ததை மாமா சரவணன் கேட்டுடறான். இரு உன் பெரியப்பாகிட்ட சொல்லி, உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்றேன்னு சொல்றான். ஆனா,பெரியப்பா தமிழ்செல்வி கறந்த பலமாதிரி...அவ பொய் சொல்ல மாட்டான்னு சொல்றார்.
பெரிய குண்டா பெரியப்பா
ஆனா, தமிழ்செல்வி உன்னை வேற ஊரில் தங்கி படிக்க வச்சுட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியாதும்மா...காலம் கெட்டு கிடக்குன்னு சொல்றார்.நம்ம ஊரில பன்னிரண்டாம் கிளாஸ் வரைக்கும்தான் பெரியப்பா இருக்கு.நாம பயிர் செய்யறோம்..வயலிருக்க இடத்துல வந்துதானே பெரியப்பா பயிர் செய்ய முடியும். அப்படித்தான் பெரியப்பா படிப்பும்னு தமிழ்செல்வி எவ்வளவோ சொல்லியும் பெரியப்பா இன்னும் சமாதானம் ஆகலை.
என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்...