எனக்கு கிரஷ் நடிகர் விஜய் மேலதான்..சோனியா அகர்வால்
சென்னை: நடிகை சோனியா அகர்வால் சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
பஞ்சாபி பெண்ணான நடிகை சோனியா அகர்வால் தமிழகத்துக்கு வந்து இத்தனை வருஷமாகியும் அவருக்கு தமிழ் இன்னும் சரியாக பேச வரவில்லை. என்ன காரணமோ...
காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குநர் செல்வராகவன் இவரை நடிகையாக அறிமுகப்படுத்தினார். இவரின் அடுத்த படமான 7 ஜி ரெயின்போ காலனி படத்திலும் நடித்தார்.
திருட்டு பயலே,கோயில் ,புதுப்பேட்டை போன்ற படங்களில் முத்திரை பதித்த சோனியா அகர்வால், இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனாலும் இரு வருடங்களில் இருவருக்குமான வாழ்க்கை கசந்து விவாகரத்தில் முடிந்தது. இதற்கு பின்னர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்த சோனியா அகர்வால்,கிடைக்கும் வாய்ப்புக்களில் நடிக்க துவங்கினார் என்றாலும், பிரகாசமான வாய்ப்பு எதுவும் அமையவில்லை.
எல்லாம் இருந்தும்.. வாய்ப்புகள் இல்லை.. ஆனாலும் அசத்தும் ரெட் ஹாட் அந்தாரா!
இப்போது தனிமை என்று ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இலங்கையிலிருந்து வந்த ஒரு பெண் தனிமையில் எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதே கதை.
நடித்த படங்களில் 7 ஜி ரெயின்போ காலனி மிகவும் பிடித்த படம். அதுதான் தன்னை அடையாளம் காட்டிய படம் என்று கூறினார். புதுப்பேட்டை படத்தில் நடிச்சது,கோயில் படத்தில் நடிச்சது இதில் எது ரொம்பபிடிக்கும்னு கேட்டபோது, புதுப்பேட்டை படத்தில் நடிச்ச ரோல்னு சொன்னார்.
எப்போதும் நடிகர் விஜய் மேல ஆன் ஸ்க்ரீன் கிரஷ் உண்டுன்னு சொன்னவர்,அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் இதை சொல்லலைன்னு சொன்னார்.விஜய் எப்போதும் அமைதியாக அதிகம் பேசாமல் இருந்ததுனால அவருடன் சகஜமாக பேச வாய்ப்பு கிடைக்கலைன்னு சொன்னார்.