Chithi 2 Serial: சித்தி 2 சீரியலில் நான் வருவேன்... கண்ணின் மணி பாடல் உண்டு.. ராதிகா
சென்னை: சன் டிவியின் சன் குடும்ப விருதுகள் முன்னோட்டம் ஞாயிறு அன்று ஒளிபரப்பானது.
அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ராதிகா சித்தி 2 வில் கண்டிப்பாக நான் வருவேன்.. கண்ணின் மணி பாலும் உண்டு என்று கூறினார்.
சித்தி 2 எப்போது வரும்,. அதில் ராதிகா நடிப்பாரா என்று பலரும் ஆவலாக கேட்டு வரும் நேரத்தில் அவரின் இந்த பதில் பலருக்கும் மகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.
சித்தி சூப்பர் ஹிட்
மெகா சீரியல் வரிசையில் சித்தி சீரியல் சூப்பர் ஹிட் சீரியல் என்று சொல்லலாம். அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த முதல் சீரியல். ராதிகாவுக்கு கிழக்கே போகும் ரயிலுக்குப் பிறகு மக்கள் மீண்டும் அதே இடத்தை வழங்கி மகிழ்ந்தார்கள்.
சீரியல்கள்
சித்திக்குப் பிறகு அண்ணாமலை, செல்வி, செல்லமே, வாணி ராணி என்று ராதிகா சரத்குமார் சன் டிவிக்கு சீரியல்கள் வழங்கி வந்த நேரத்தில் ஞாயிறுகளில் சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற சீரியல்களை வழங்கி வந்தார்.
கோடீஸ்வரன்
தங்கவேட்டை கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சிகளையும் ராதிகா சரத்குமாரின் ரடான் டிவி வழங்கி வந்தது. அவ்வப்போது சில சிறப்பு நிகழ்ச்சிகளையும் சன் டிவிக்கு ரடான் டிவிதான் தொகுத்து வழங்கி வந்தது. இப்படி ராதிகா சரத்குமார் இல்லாமல் சன் டிவி இல்லை, சன் டிவி இல்லாமல் ராதிகா சரத்குமார் இல்லை என்றான நிலையில்...
சந்திரகுமாரி
ராதிகா சரத்குமாரின் சந்திரகுமாரி சீரியல் எதிர்பார்த்த அளவில் வெற்றியாக அமையவில்லை. சன் டிவி கொஞ்சமும் எதிர்பாராமல் சந்திரகுமாரி ஒளிபரப்பு நேரத்தை ராதிகா சரத்குமாரின் வழக்கமான 9:30 மணி நேரத்தில் இருந்து 6:30 மணி நேரத்துக்கு ஒரே அடியாகத் தூக்கி அடித்தது.
காணாமல் போனார்
நொந்து போன ராதிகா சரத்குமார் கதைப்படி சீரியலில் காணாமல் போனார். திரும்ப சீரியலில் கிடைத்தபோது இவருக்கு பதில் இவர் என்று ராதிகாவுக்கு பதில் சந்திரவாக நடிகை விஜி நடித்தார். சீரியலை விரைவில் முடித்து, ராதிகாவின் சீரியலும் அத்தோடு முடிந்து போனது. இப்போது சித்தி 2 மூலம் ராதிகா வருவதாக அறிவித்து இருக்கிறார்.