Naam Iruvar Namakku Iruvar Serial: யாரா இருந்தாலும் பொண்ணுங்க நோ சொன்னா நோதான்!
சென்னை: நீ அஜீத்தோட நேர் கொண்ட பார்வை படம் பார்க்கல? பொண்ணுங்க நோ சொன்னா நோதான்!
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி மாயனிடம் இப்படி கூறுகிறாள்.
தல இப்படி ஒரு டயலாக் பேசினாலும் பேசினார்.. பட்டி தொட்டில இருக்கற எல்லா பொண்ணுங்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வந்துருச்சு.
மாசமோ மார்கழி
தேவி கட்டிலில் உறங்கிக் கொண்டு இருக்க...ஆஹா என்ன அழகா சிலை மாதிரி தூங்கறாளேன்னு அவளை ரசிக்கிறான் மாயன். ஏங்க.. மார்கழி மாசம்.. நல்ல குளிரா இருக்குதே..உங்களுக்கு குளிரலை? லண்டன்ல படிச்சவிங்க இதைவிட குளிரை பார்த்து இளர்ப்பீங்களோன்னு கேட்கறான்.
கல்யாணமாகி குட்நியூஸ்
ஏய்.. இப்போ என்ன வேணும் உனக்கு? தூங்காமா உளறிகிட்டு உட்கார்ந்து இருக்கேன்னு தேவி கத்த. இல்லைங்க... கல்யாணமாகி உங்க தம்பிக்கு ஒரு மாசம் கூட ஆகலை .. அதுக்குள்ள குட் நியூஸ் சொல்றாங்க. நமக்கு கல்யாணமாகி ஒன்றரை வருஷம் ஆகுது.. ஒரு குட் நியுஸும் இல்லைன்னு சலிச்சுக்கறான்.
உங்களுக்கு தோணலை
ஏங்க உங்களை இறுக்கி கட்டிக்கணும்னு எனக்கு அப்பப்போ தோணும்.. உங்களுக்கு தோணினது இல்லையான்னு நைசா கேட்கிறான் மாயன். தோணும்னு தேவி சொல்ல. படக்குன்னு எழுத்து. தேவி அருகில் உட்கார்ந்துக்கறான். நிஜமாவாங்கன்னு கேட்கிறான். ஆமாம்.. தோணும்.. ஆனா நீதான். என் கன்னத்தை தடவ.. கையைப் பிடிக்க பர்மிஷன் கேட்பியேன்னு தேவி சொல்றா.
அப்போ கட்டிகிட்டா
ஏங்க.. இப்போ.. ஒருவேளை..உங்களைக் கேட்காமல் திடீர்னு இப்படி கட்டிகிட்டா என்று அவளை கட்டிக்கறான் மாயன். அடிச்சு பல்லெல்லாம் பேத்துப்புடுவேன்னு சொல்லி தள்ளி விடறா. ஏங்க.. நீங்கதானே பர்மிஷன் கேட்காம பண்ணலாம்னு சொன்னீங்கன்னு கேட்கிறாள்.சொன்னேன்.. என் பர்மிஷன் கேட்காம பண்ணலாம்னு சொன்னேனா?
நோன்னா நோதான்
நீ நேர்கொண்ட பார்வை படம் பார்கலேன்னு தேவி கேட்க.. இல்லேன்னு சொல்றான் மாயன். அதுல.. யாரா இருந்தாலும் பொண்ணுங்க நோ சொன்ன நோதான்.. போய் படுன்னு சொல்றா. அவன் சொல்றான்.. புதுசு புதுசா சட்டம் போடறாங்க.. நோ சொன்னா நோதானாமே புலம்பறான்.