Pandian Stores Serial: நான் பிரக்னன்ட் ஆனா வேலைக்கு போக வேணாம் இல்லே...?
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வேலைக்கு போகணும் போகணும்னு துடிச்சு மீனா, இப்போ நான் பிரக்னன்ட் ஆனா வேலைக்குப் போக வேணாம் இல்லேன்னு குதூகலமா சொல்றா பாருங்களேன்....!
கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தினமும் மாலை 4 மணிக்கு மறு ஒளிபரப்பாகி வருது. மறு ஒளிபரப்பிலும் மக்கள் இந்த சீரியலை விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.
மீனா அப்பாவை எதிர்த்து ஜீவாவை கல்யாணம் செய்துக்கொண்டு கூட்டு குடும்பத்தில் மருமகளாக வந்து சேர்கிறாள். அப்போதுதான் படித்த படிப்பு வீண் போக கூடாது என்று டீச்சர் வேலைக்கு போக ஆரம்பிக்கிறாள்.
சபாஷ் போடுங்க பவானி போலீஸுக்கு.. குட்டீஸை எப்படி பாத்துக்கறாங்க பாருங்க!
கடலோர கவிதைகள் டீச்சர்
மீனா வேலைக்கு போக வேண்டும் என்று துடிக்க, அவளுக்கு டீச்சர் வேலை கிடைக்கிறது. உடனே பந்தாவாக குடை எடுத்துக்கொண்டு, கூலிங் கிளாஸ் அணிந்துக்கொண்டு ஸ்டைலாக வேலைக்கு போயிட்டு வருகிறாள். இரண்டு நாளில் வேலை போரடிச்சுப் போகுது. மூர்த்தி மாமாகிட்டே மாமா உங்க அனுமதி இல்லாமல் வேலைக்கு போனது தப்புதான் மாமா என்று ஒரு கொக்கி போடுகிறாள்.
கொக்கியில் மாட்டவில்லை
மூர்த்தி மாமாவிடம், மாமா உங்க பர்மிஷன் இல்லாம நான் வேலைக்கு போனது தப்புதான் மாமா. இப்போகூட உங்களுக்கு பிடிக்கலேன்னா சொல்லுஙக வேலையை விட்டுடறேன்னு சொல்லறா. நைசா இப்படியே வேலையை விட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு...ஆனா, மூர்த்தி.. சேச்சே.. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைப்பா.. பொண்ணுங்க படிச்சுட்டு சும்மா இருக்க கூடாது...வேலைக்கு போறது நல்லதுதான்னு சொல்லி மீனாவின் கொக்கியில் மாட்டாமல் பதில் சொல்லிட்டார்.
எப்படி வேலையை விடுவது
எப்படி, எதை சொல்லி இந்த வேலையை விடுவது. தினம் பேக்கை மாட்டிகிட்டு, இந்த பிள்ளைகளை கட்டிக்காத்து படம் சொல்லி கொடுப்பது பெரும் தலைவலியா இருக்கேன்னு தனக்குத்தானே புலம்பிகிட்டு நிக்கறா மீனா. இனிமேல் வேலைக்கு போகவே கூடாது என்கிற முடிவுக்கும்
நான் பிரக்னன்ட் ஆனா...
பெட்டில் உட்கார்ந்து இருக்கும் மீனா...மெதுவாக ஜீவாவிடம் நான் பிரக்னன்ட் ஆனா நீ என்னடா பண்ணுவேன்னு கேட்கிறாள். அவன் யோசித்துக்கொண்டே இருக்க...என்னடா ஜீவா இதுக்கு இவ்ளோ யோசிக்கறேன்னு கேட்கிறாள். எனக்கு சந்தோஷமா இருக்கும்னு சொல்றான் ஜீவா.
வேலைக்கு போக வேணாம்
வீட்டில் எல்லாரும் என்னடா சொல்லுவாங்க என்று மறுபடியும் கேட்கிறாள்...எல்லாரும் சந்தோஷப்படுவாங்க.. உன்னை தூக்கி வச்சு கொண்டாடுவாங்கன்னு ஜீவா சொல்றான்...வேற என்ன நடக்கும்... வேற என்ன நடக்கும் என்று யோசித்துக்கொண்டே இருந்த மீனா...அப்படி இருந்தா நான் வேலைக்கு போக வேணாம் இல்லை ஜீவான்னு கேட்கிறாள். எப்படியோ அங்கே சுத்தி இங்கே சுத்தி விஷயத்துக்கு வந்துட்டா மீனா.