sembaruthi serial: இப்படியே போனா ஆயுசுக்கும் சீரியல் எடுக்கலாம்ங்க!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் எண்ணி ஐந்து காட்சிகள் இருக்கும்.. ஒரு எபிசோட் முடிஞ்சு போச்சு.
க்ளோசப், காமிராவை முன்னே பின்னே அசைச்சு அசைச்சு எடுக்கறது....லாங் ஷாட் வச்சு கிட்டே கொண்டு போவது அப்படி இப்படின்னு எபிசோடை நீட்டிடறாங்க.
இப்படியே வருஷம் முழுக்க எபிசோடை நீட்டிச்சா கதையை எப்போதுதான் சொல்வீங்க?
பார்வதி ஆங்கிலம்
பார்வதி பட்டதாரி ஆகணும்னு ஆதி ஆசைப்பட்டு படிக்க சொல்றான். அவ படிப்பு எதுக்கு மாமான்னு கேட்கிறாள். உன் தம்பி கலெக்டர் ஆகணும்னு நீ ஆசைப்படறே... அது மாதிரி நீ ஒரு கிராஜுவேட் ஆகணும்னு நான் ஆசைப்படறேன்னு சொல்றான் ஆதி. அதனால் நீ படி பார்வதின்னு அவளை படிக்க வச்சு பக்கத்துல உட்கார்ந்து பார்க்கிறான் ஆதி.
ஃபாரினர்ஸ் மீட்டிங்
மறுநாள் கம்பெனிக்கு ஃபாரினர்ஸ் வராங்க.. குட்வில் அம்பாசிடர்தான் மீட்டிங்கில் பேசணும்னு மித்ரா சூழ்ச்சி செய்து, மேனேஜரை விட்டு, தப்பு தப்பா ஆங்கிலம் டைப் பண்ண சொல்லி பார்வதிக்கிட்டே தர சொல்லிடறா. பார்வதியும் அதை பார்த்து பேசி அவமனப்பட்டுடறாளாம்.
மாமா கத்துக்க
மாமா அப்பவே என்னை இலங்கிலீஷ் பேச கத்துக்க சொன்னார். நான்தான் அசால்ட்டா விட்டுட்டேன்னு பார்வதி தனக்குள்ள பேசிக்கறா. அப்பறம் ஆதி வர்றான். மாமாகிட்டே இதுப் பத்தி சொல்லக் கூடாதுன்னு நினைச்சு அவனை பார்த்ததும் சிரிக்கறா.
ஒரு பாட்டு
அப்புறமென்ன ஒரு சினிமா பாட்டு போட்டுக்கிட்டு, பார்வதி தோளில் ஆதி கை போட்டபடி ஒரு வாக் போறாங்க. இதுதான் ரொமான்ஸ். இதுக்காக ரசிகர்கள் தவம் கிடக்கறாங்க. அப்பறம் போன் வருது.. பார்வதி அவமானப் பட்டது பற்றி ஆதிக்கு தெரிஞ்சுருது. ஆதி மித்ரா மேல கோபமா வீட்டுக்கு வர்றான்.
இந்த டிசம்பர்
இவ்ளோதான் சீன்...நாலு லொகேஷன்.. எபிசோட் முடிஞ்சுது.இப்படியே போனா, இந்த டிசம்பர் 30 வர வரைக்கும் கூட ஆதியோட பிறந்த நாள் வராது. அவனுக்கும் பார்வதிக்கும் நடந்த கல்யாணம் பத்தி ஆதியும் சொல்ல நேரம் வராது.