For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாட்டு வேணுமா.. பேச்சு வேணுமா?.. சுஹாசினியை ஓட விட்ட இளையராஜா!

Google Oneindia Tamil News

சென்னை: அண்மையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள்.

அப்போது உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது பாடலை சித்ராவுடன் சேர்ந்து பாட தயாரானார் கமல்ஹாசன். இதற்கு முன்பே ஸ்ருதி ஹாசனுடன் இரண்டு பாடல்களை பாடிவிட்டார்.

Ilayaraja make Suhasini to stop talk more in Ilayaraja 75 function

இதற்கிடையில் மேடை ஏறிய சுஹாசினி, ரெண்டு நாளைக்கு முன்னால அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். மீட்டிங்கில் பேசிப்பேசி கமலுக்கு தொண்டை கட்டிப் போயிருந்துச்சு. சைகையிலதான் பேசினார். அவ்ளோ தொண்டை கட்டி இருந்துச்சு... இப்போ எப்படி தொண்டை வந்துச்சுன்னு சுஹாசினி சிரித்தபடி கேட்டார்.

Ilayaraja make Suhasini to stop talk more in Ilayaraja 75 function

இளையராஜா, கமல் என்கிட்ட தொண்டை கட்டிக்கிச்சுன்னு சொன்னார், ஏன் கட்டி வச்சு இருக்கீங்க..அவிழ்த்து விட்ருங்கன்னு சொன்னேன்னு சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார். மீண்டும்... எப்படி கமல், நிஜமா சொல்லுங்க என்று சுஹாசினி ஆரம்பிக்க,

இப்போ பாட்டு வேணுமா இல்லை பேச்சு வேணுமான்னு இளையராஜா கேட்டார். அய்யயோ பாட்டுத்தான் வேணும்னு அவசரமாக மேடையை விட்டு இறங்கினார் சுஹாசினி மணிரத்னம்.

பேசிட்டே இருந்தா இப்படித்தான்..!

English summary
Maestro Ilayaraja made Suhasini to stop talk more in Ilayaraja 75 function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X