இண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா
சென்னை: சன் டிவியின் காஞ்சனா 3 வெற்றி விழாவுக்கு வந்திருந்த நடிகை வேதிகாவுக்கு நடிகர் அஜீத் ரொம்ப பிடிக்குமாம்.
அஜீத் பிடிக்கும், அஜீத் வாழற அமைதியான வாழ்க்கை மாதிரி எனக்கும் வேணும்னு நிறைய பிரபலங்கள் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள்.
சிம்பு கூட தான் காதலித்து திருமணம் செய்துகொண்டால் அஜீத் மாதிரி குடும்ப வாழ்க்கை வாழணும்னு ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.
காரணம் என்னன்னு பார்த்தா,அஜீத் தனது குடும்பத்தை கொண்டாடும் விதம்தான். மனைவிக்கு என்ன மரியாதை தரணுமோ அதைத் தருவதில் அஜீத் தவறுவதில்லை.குழந்தைகளை எந்த விதத்தில் குதூகலப்படுத்தி மகிழ்விக்கணுமோ அதிலும் தவறுவதில்லை.
அஜீத்தின் மனைவி ஷாலினியும் அப்படித்தான். அமைதியான குடும்ப வாழ்க்கையை விரும்பும் இரு மனமும் ஒன்று சேர்ந்ததால்தானோ என்னவோ, இண்டஸ்ட்ரியில் காதல் கல்யாணம் செய்துகொள்ள விரும்பும் பிரபலங்கள் அஜீத் ஷாலினி போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அருந்ததி... இது படமலல்ல...சன் டிவியின் புது சீரியல் பேரு!
அப்படித்தான் சொன்னார் வேதிகா.. இன்டஸ்ட்ரியில் உள்ள ஒருத்தரை கல்யாணம் செய்துக்க விரும்பினா அவர் யாரை மாதிரி இருக்கணும் என்றபோது...
அஜித் மாதிரி ஒருத்தர் கிடைச்சா கல்யாணம் செய்துக்குவேன்.அஜீத்,ஷாலினி மாதிரி வாழணும்னு சொல்லி இருக்கார்.