Pandian Stores Serial: புது பைக்கில்.. யாருப்பா இந்த வேலையைப் பார்த்தது...?
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவுக்கு அவங்க மாமனார் வாங்கி குடுத்த புது புல்லட்டில் ஆண்கள் உள்ளாடை சமாச்சாரம் அது இதுன்னு கண்டதை காயப்போட்டு வச்சு இருக்காங்க.
இந்த நேரம் பார்த்து ஜீவாவின் மாமனார் மனைவியுடன் பொண்ணு மீனாவை பார்க்க வர்றார். மனுஷன் புது பைக்கையும், அதில் காயப்போட்டு இருந்த துணியையும் பார்த்து நொந்து போயிட்டார்.
ஒன்னும் கேட்காதீங்க. நாம பைக் வாங்கிக் குடுத்துட்டோம். அதை நல்லா வச்சுக்கறதும், வச்சுக்காததும் அவங்க விருப்பம் என்று மனைவி பல தடவை சொல்லிட்டுத்தான் வீட்டுக்குள்ளே புருஷனோட போறாங்க.
மாப்பிள்ளை பைக் ஓட்டறீங்களா
மாப்பிள்ளை பைக் ஓட்டறீங்களா இல்லையா? வெளியில பைக் மேல துணி எல்லாம் காய போட்டு வச்சு இருக்கீங்கன்னு வாயை அடக்காமல் கேட்டுட்டார். அச்சச்சோ.. வெயில் சரியா அடிக்கலேன்னு யாரோ பைக் மேல் துணியை காயப்போட்டு வச்சு இருப்பாங்க போல.. இருங்க நான் உடனே எடுத்துடறேன்னு முல்லை சொல்லிட்டு போய் அந்த துணிகளை எடுக்கறா.
மறுபடியும் ஆரம்பம்
மறுபடியும் மீனாவின் அப்பா, எங்கே கிளம்பிட்டீங்கன்னு கேட்கறார். மீனாவை இன்னிக்கு செக்கப் கூட்டிகிட்டு போகணும். அதான் 11 மணிக்கு டோக்கன் என்று தனம் சொல்றா. அப்படியா.. யார் யார் போகப் போறீங்கன்னு கேட்கிறார். நான்தான் எப்போதும் கூட போவேன்.. நாங்க மூணு பேரும் போலாம்னு கிளம்பினோம் என்று ஜீவாவையும் சேர்த்து சொல்றா தனம். காரில் 5 பேர் போக முடியாது..நாம் நாலு பேர் மட்டும் போலாம்னு சொல்றார் மீனாவின் அப்பா.
தானம் மனசு வலிக்குது
தனம் மனசு வலிச்சாலும் ஒண்ணுமே நடக்காத மாதிரி அதை இதை பேசி முல்லையிடம் சிரிக்க, அக்கா நீங்க சோகமா இருக்கறது ஏன்னு நான் ஒன்னும் கேட்க மாட்டேன். அதுக்காக இப்படி அடிக்கடி சிரிச்சு நடிக்காதியன்னு சொல்றா. நான் எதுக்கு முல்லை நடிக்கணும்.. கொஞ்சம் வருத்தம் இருந்துச்சுதான் என்று தனம் பேசும்போதே பார்ப்பவருக்கு கண் கலங்குது.
கதிர் முல்லை
என்னதான் தனம் மனசு இப்படி வலிக்குதே... பாசத்தில் பெற்றவள் போல இருக்கும் இவளுக்கு என்னென்ன கஷ்டங்கள் இன்னும் காத்திருக்குதோ என்று நினைச்சாலும், முல்லை கதிர் ரொமான்ஸ் நடுவில் இல்லாமல் போனால் எப்படி? பேசணும் போல் இருக்குன்னு போன் பன்றான் கதிர். என்னங்க அங்கே மழை பெய்யுதான்னு முல்லை கேட்க.. அவன் சுற்றும் முற்றும் பார்த்து இல்லையேன்னு சொல்றான். இல்லே நீங்க போன் பண்ணி இருக்கீகளே அதான் கேட்டேன்னு முல்லை சொல்ல.. பழைய ஜோக்த்தான்.. இங்கே ரொமான்ஸா மாறி இருக்குதே...!
தை பூச விரதம்
முல்லை தலையில் கதிர் வாங்கித் தந்த பூ..கதிர் ஆசையா பொண்டாட்டி முல்லையைப் பார்த்து ரசிக்கிறான். இவளும் வெட்கப்பட்டு தலை குனிய...டேய்.. மூர்த்தி.. தை பூசம் வருது. 10 நாள் விரதம் இருக்கணும். அசைவம் சாப்பிட கூடாது.. புருஷன் பொண்டாட்டி சுத்தமா இருக்கணும்னு சொல்ல, இருவரும் திடுக்கிட்டு சுய நினைவுக்கு திரும்பறாங்க. இப்படி ஒரு குடும்ப கதை.. எல்லாரும் உட்கார்ந்து கூச்சம் இல்லாம பார்க்கற மாதிரி.. நல்லாருக்கு.