For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்திரகுமாரி சீரியல் முடிவுக்கு வருதா... ரடான் தயாரிப்பு இன்னும் இருக்குமா?

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியில் 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்திரகுமாரி சீரியல் இன்று மாலையுடன் முடிந்து விடும் என்றே தோன்றுகிறது.

வரும் திங்கள் முதல் மாலை 6:30 மணிக்கு தமிழ்ச்செல்வி என்கிற ஒரு சீரியல் ஒளிபரப்பாகி உள்ளது. அதே சமயம் சந்திரகுமாரி நேர மாற்றம் என்கிற அறிவிப்பு இல்லை.

அதனால் சந்திரகுமாரி சீரியலுக்கு எண்ட் கார்டு போட்டுவிடுவார்கள் என்கிற முடிவுக்குத்தான் வரத் தோன்றுகிறது.

ஒருத்தி புருஷனை இன்னொருத்தி

ஒருத்தி புருஷனை இன்னொருத்தி

முன்பு எந்த சீரியலில் பார்த்தாலும், ஒருத்தி புருஷன் மேல் இன்னொருத்தி ஆசைப்படுவது... கள்ளத்தனாமா குடித்தனம் நடத்துவது... இப்படித்தான் இருக்கும் . இதுக்கெல்லாம் இப்போது வரும் சீரியல்களில் அவ்வளவாக இடமில்லாமல்தான் இருந்து வந்தது.

சந்திரகுமாரி சீரியலில் ஆரம்பம்

சந்திரகுமாரி சீரியலில் ஆரம்பம்

இதை மறுபடியும் சந்திரகுமாரி சீரியல் ஆரம்பித்து வைத்து இருக்கிறதுன்னுதான் சொல்லணும். சந்திராவின் புருஷன் நீலகண்டன் ருத்ராவுடன் கல்யாணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்துவது இதெல்லாம் இன்றைய காலத்து பெண்களுக்கு பிடிக்கலைன்னுதான் சொல்லணும்.

அஞ்சலிக்கு சத்யாவுடன்

அஞ்சலிக்கு சத்யாவுடன்

அஞ்சலிக்கு சத்யாவுடன் கல்யாணம் நிச்சயம் ஆகுது. அஞ்சலியை முன்பு காதலிச்ச தாய் மாமா மகன் ஆதவன், எப்படியாவது அஞ்சலி சத்யா கல்யாணத்தை நிறுத்தணும்னு வேலை பார்க்கிறான்.

யாரோ பெத்த பொண்ணுங்களை

யாரோ பெத்த பொண்ணுங்களை

இதே மாதிரி சந்திராவை காப்பாத்தின சீதாவின் அப்பா இறந்துவிட, சீதாவையும், அவள் தங்கையையும் கொண்டு வந்து வீட்டில் வச்சுக்கறாங்க. அஞ்சலி கோவம் வந்தாலும் இவங்களைத்தான் திட்டறா. சந்திரா கோவம் வந்தாலும் இந்த பொண்ணுங்களைத்தான் பொளேர் பொளேர்னு அறையறாங்க....

உரிமையாம்..அன்பாம்.. பாசமாம்!

உரிமையாம்..அன்பாம்.. பாசமாம்!

அவங்க பெத்த பொண்ணை அடிக்க மாட்டேங்கறாங்க... நம்ம மட்டும் அவங்களுக்குத் தொக்கான்னு தங்கச்சி கேட்கறா. வா இனிமே இங்கே இருக்க வேணாம்னு தங்கச்சி சொல்ல இருவரும் வீட்டை விட்டு போறாங்க. சத்யாவும், அஞ்சலியும் ரெண்டு பேரையும் தேடி அழைச்சுக்கிட்டு வர்றாங்க.. அடிக்க உரிமை உண்டுன்னு சமாதானம் வேற சொல்றாங்க.

வீட்டுக்கு வந்தும் சீதாவுக்கு

வீட்டுக்கு வந்தும் சீதாவுக்கு

வீட்டுக்கு வந்தும் சீதாவுக்கு அடி விழுது...அடிச்சா என்னை விட்டுட்டு போயிடுவியாடின்னு மறுபடியும் அடி. இது என்ன மாதிரி கேரக்டர்..இதே அன்பையும், கோவத்தையு பெத்த பொண்ணு அஞ்சலிகிட்ட காமிக்காம அப்பாவும், பொண்ணும் சேர்ந்துடுவாங்களோன்னு கவலைதான் சந்திராவுக்கு.

சீரியலை எப்படி என்னிக்கு முடிக்கறாங்களோ பார்க்கலாம்...

English summary
Chandrakumari serial, which will be broadcast at Sun TV on 6:30, seems to have ended with the evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X