ஒவ்வொரு மர்ம முடிச்சும் மெல்ல மெல்ல அவிழ்கிறது.. பவானிதான் நீலாம்பரியா!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் மர்மங்கள் விலகிட்டே வருது. எப்படியோ ஆரம்பிச்ச கதை இப்போ நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு வேற வழியில பயணிக்குது.
நிலாவின் வளர்ப்பு அப்பா தங்கைதான் நிலாவின் அம்மா. அந்த தங்கையின் பேரு சுஜாதா. ஆனா, இப்போ ரேவதின்னு சொல்லிக்கிட்டு நீலாம்பரி வீட்டு வேலைகாரியா இருக்காங்க.
நீலாம்பரி வீட்டு வேலைக்காரியா இருக்க சுஜாதாவுக்கு நீலாம்பரியால்தான் தன் புருஷனுக்கு ஆபத்து வந்ததுன்னு தெரிஞ்சுதா தெரியாதான்னு இன்னும் மர்மம் நீடிக்குது.
நீலாம்பரியின் உண்மையான பேரு பவானி. சுஜாதாவின்புருஷன் ஸ்ரீதர் பவானியின் பிசினெஸ் பார்ட்னர். அவர் மேல் பவானி ஆசைப்படறாங்க. அப்போதான் ஸ்ரீதர் எனக்கு கல்யாணம் ஆயிருச்சு.. அவ பேரு சுஜாதான்னு சொல்றார்.
அப்போ பவானிக்கு அதிர்ச்சியாகுது... ஒரு நாள் சுஜாதாவுக்கு பிரசவ வலி வரும்போது ஸ்ரீதர் போன் பண்ணி நான் பெரிய ஆபத்துல இருக்கேன். நீங்க யாரும் அந்த ஊரில் இருக்காதீங்க. என் குழந்தை, பொண்டாட்டி ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொல்றார்.
சுதா இதுக்குத்தான் ஃபர்ஸ்ட் நைட் வேணாம்னு சொல்றாளா...?
அதுக்கப்புறம் ஸ்ரீதர் வரவும் இல்லை, சுஜாதா கணவரை பிரிந்த ஏக்கத்தில் குழந்தையை அண்ணனிடம் பார்த்துக்க சொல்லி லெட்டர் எழுதி வச்சுட்டு கிளம்பிடறாங்க. அந்த குழந்தைதான் நிலா.
பவானி ஸ்ரீதரை கடத்தி வச்சு,என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணிடுன்னு கட்டி வச்சு மிரட்டறாங்க. அவர் முடியாதுன்னு சொல்ல கத்தியை வச்சு வில்லன் கூட சேர்ந்து ஸ்ரீதரின் கழுத்தில் வெட்டிடறாங்க.
ஸ்ரீதர் செத்துட்டாரா? பவானி நீலாம்பரி ஆனது எப்படி...சுஜாதா ரேவதியானது எப்படின்னு போக போகத்தான் தெரியும்.