Chithi 2: சித்தி சீசன் 2 வில் ராதிகாவுக்கு ஜோடி பொன்வண்ணனா?
சென்னை: சித்தி சீசன் 2 சீரியலில் தனக்கு ஜோடி பொன்வண்ணன் என்று ராதிகாவே சொல்லி இருக்கார்.
சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் சித்தி 2 பற்றிய அறிமுகம் நடைப்பெற்றது.
அப்போது, சித்தி சீசன் 2 சீரியலில் நடிப்பவர்களை மேடையில் ராதிகா சரத்குமார் அறிமுகம் செய்தார்.
ஜோடி பொன்வண்ணன்
சித்தி சீரியல் முதல் சீசனில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி என்று சொன்ன ராதிகா, சித்தி சீசன் 2 குழுவினரை மேடைக்கு அழைத்தார். அதில் சித்தியில் நடித்த ஷில்பா, செல்வியில் நடித்த மகாலட்சுமி. வாணி ராணியில் தேனுவாக நடித்தவர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.அப்போது தனக்கு ஜோடியாக நடிப்பவர் பொன்வண்ணன் என்று ராதிகா கூறினார்.
Tamilselvi Serial: அக்கினி குண்டத்தில் அடிபிரதட்சணம்...மூட நம்பிக்கையின் உச்சம்ய்யா!
சித்தி அதே குரல்
இது வேறு ஒரு சித்தியின் கதை என்று சொன்னார் ராதிகா. அதேபோன்று ஒரு குழந்தை சித்தி என்று இப்போது அழைத்தது. அது போல சித்தி என்று அழைக்கும் குழந்தை நட்சத்திரம் ஒன்றும் சித்தி சீசன் 2 வில் நடிக்கிறது. வாணி ராணியில் செல்வி, பூஜாவாக நடித்த நடிகைகளும் இதில் நடிக்கிறார்கள்.
இயக்குநர் பொன்வண்ணன்
சின்னத்திரையில் இயக்குநர் பொன்வண்ணன் நடிக்கும் முதல் சீரியல் என்று சொல்லலாம். நடிகர் சங்கத் தேர்தலில் பொன்வண்ணன் சரத்குமாருக்கு எதிராக களம் இறங்கி விஷால் அணியில் இருந்தவர். இப்போது ராதிகா சீரியலில் நடிப்பது வரவேற்கதக்கதாகவும், இன்னொரு புறம் எதிர்பார்க்காத தக்கதாகவும் இருக்கிறது.
சரண்யா பொன்வண்ணன்
அம்மா வேடத்துக்குப் புகழ்பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பட வாய்ப்புக்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையில், பொன்வண்ணன் சின்னத்திரைக்கு நடிக்க வந்திருப்பது எதிர்பார்பைத் தூண்டி இருக்கிறது.அதோடு சித்தியாக ராதிகாதான் நடிக்கிறார் என்பதும் உறுதியாகி உள்ளது.