நிலாவோட அம்மா இவங்கதானா?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் இன்னிக்கு ஒரு உண்மை வெளியாகி இருக்கு. நிலா வளர்ப்பு பொண்ணுதான்னு முதலில் தெரிஞ்சுது. இப்போ நிலா அம்மா யாருன்னு தெரிஞ்சு இருக்கு.
நிலா சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே பல கேள்விகள் எழுந்துகிட்டே இருந்து வருது.நிலாவை மட்டும் ஒரு விதமாக நடத்தும் அம்மாவைப் பார்க்கையில், நிலா இவங்க பொண்ணு இல்லையான்னு கேள்வி வந்துச்சு.
இப்போ நிலா இவங்க வளர்ப்பு பொண்ணுதான்னு தெரிஞ்சப்போ.. நிலாவோட அப்பா அம்மா யாருன்னு தெரியலைன்னு ஒருகேள்வி வந்துச்சு..
பெண்கள் எல்லா விதத்திலும் நமக்கு முன்னால்தான்... நடிகர் ஹரீஷ் கல்யாண்
சஞ்சய்
இப்போ, நிலாவோட அம்மா நீ அசோக்கைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு சொல்றாங்க.
நான் கார்த்திக்கை காதலிக்கறேன்னு தெரிஞ்சும் சஞ்சய்க்கு என்னை பேசினீங்க...இப்போ அசோக்கை கல்யாணம் பண்ணிக்கோன்னு கொண்டு வந்து நிறுத்துறீங்க... ஏம்மா.. ஸ்வேதாவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா செய்வீங்களான்னு நிலா அழறா.
பொண்ணு இல்லை
மாட்டேன்..நிச்சயமா மாட்டேன்னு சொல்றாங்க அம்மா.அப்புறம் என்னை மட்டும் ஏன்மா இப்படி பண்றீங்க..அவளை மாதிரி நானும் உங்க பொண்ணுதானேன்னு கேட்கறா. நீதான் என் பொண்ணு இல்லைன்னு சொல்லிட்டேனேடின்னு சொல்றாங்க.
யாரும்மா அம்மா
அப்போ என் அம்மா யாரும்மா..உங்களுக்கு தெரியும்தானேன்னு கேட்கறா. அவ உங்க அப்பாவோட தங்கச்சிதான்..முறை தவறி பொறந்த உன்னை என் தலையில கட்டிட்டு ஓடிட்டான்னு சொல்றாங்க.
தப்பா அம்மாவை
அம்மாவைப் பத்தி தப்பா பேசாதீங்கம்மா.. இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு கேட்க, அவ எங்கேயாவது விழுந்து செத்து போயிருப்பா.. ஒழுக்கம் கெட்டவ உயிரோடயா இருப்பான்னு சொல்றாங்க.
யாரும்மா அப்பா
அம்மாவைப் பத்தி தப்பா பேசாதீங்கம்மா.. என் அப்பா யாரும்மா நிலா கேட்கறா..அவன் எங்க இருக்கானோ...அவன் மட்டும் உயிரோடயா இருப்பான்..எனக்கு தெரியாது போடின்னு சொல்றாங்க. ஆனா, நீ நீலாம்பரி வீட்டுக்குத்தான் மருமகளா போகணும்னு சொல்றாங்க.
நீலாம்பரி வீட்டில்
இவ்வளவும் ராஜசேகர் நிலாவின் வளர்ப்பு அப்பா ஆஸ்பத்திரியில இருக்கும் போது நடக்குது. கடைசியில் நிலாவின் அம்மா, நீலாம்பரி வீட்டில் வேலைக்காரியா இருக்காங்க. அண்ணன் பொண்ணு நிலா தன் பொண்ணுதான்னு இன்னும் நீலாம்பரி வீட்டு வேலைக்காரிக்கு தெரியலை.
இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், நீலாம்பரி நிலாவை எப்படியாவது தன் வீட்டு மருமகளாக்க நினைக்கறாங்களே ஏன்னு இன்னும் தெரியலை.