Pandian Stores Serial: இதுக்கு பேருதான் பச்சை மொளகா பாசமாப்பா...!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பாசக்கார குடும்பம். ஒருத்தர் முகம் வாடி இருந்தாலும்.. இன்னொருத்தர் என்னன்னு கேட்டு துளைச்சுடுவாங்க...
அப்படித்தான் இன்று கடைக்குட்டி கண்ணன் குடும்பமே அமைதியா இருக்கறதை பார்த்து என்னாச்சு.. என்ன நடந்துச்சுன்னு கேட்டு தொண தொணைக்கிறான். என்னமோ நடந்துருக்குன்னு கற்பனை உலகத்துக்கு வேற போயிட்டு வர்றான்.
கண்ணா.. கையை நீட்டுன்னு கதிர் சொல்ல.. எதுக்குண்ணே என்று கையை நீட்டுகிறான் கண்ணன்.. இல்லை வேணாம் நீ ஆ சொல்லுன்னு சொல்லி சாதம் ஒரு வாய் ஒட்டிவிடறான். சாதத்துக்குள்ள பச்சை மிளகாயை வச்சுட்டான்.
முகம் சாப்பாடு
மூர்த்தி, கதிர். கண்ணன், ஜீவா எல்லாரும் சாப்பாட்டில் உட்கார்ந்து இருக்காங்க. தனம் உம்முனு இருக்க என்ன அண்ணின்னு கேட்டுட்டான் கண்ணன்.. தலைவலின்னு சொல்லிட்டாங்க. பிறகு மூர்த்தி அண்ணன், கதிர் அண்னன், முல்லை அண்ணி மூணு பேர் முகமும் சரிலேயில்லை. அண்ணிக்கு தலைவலி அவங்க உம்முன்னு இருக்காங்க... நீங்களும் உம்முன்னு இருக்கீங்க உங்க மூணு பேருக்கும் என்னன்னு கேட்கிறான் கண்ணன்.
ஒன்னும் இல்லைடா
ஒன்னும் இல்லைடா நீ சாப்பிடுன்னு கதிர் சொல்ல, இல்லை.. என்னமோ நடந்து இருக்கு. அதை என்கிட்டே மறைக்கிறீங்கன்னு சொல்றான் கண்ணன். பேசாம சாப்பிடுன்னு கதிர் சொல்லிகிட்டே இருக்கான். உண்மையை தெரிஞ்சுக்காம நான் சாப்பிட மாட்டேன்னு சொல்றான் கண்ணன்
பச்சை மொளகா
கண்ணா என்று கதிர் ஆசையா கூப்பிட.. என்ன சொல்லுண்ணே என்று பதிலுக்கு கேட்கிறான் கண்ணன். இந்தா என்று அவன் கையில் ஒரு வாய் சாப்பாட்டை கொடுக்கப் போயி, இல்லை இல்லை நீ ஆ காட்டு என்று சொல்றான் கதிர். கண்ணனும் ஆசையா ஆ என்று சொல்ல, ஒரு வாய் சாதத்தில் பச்சைமிளகாயை வச்சு அவன் வாயில் ஊட்டி விடறான்.
அன்னனனுக்கு பாசம்
கதிர் அண்ணனுக்கு இப்படித்தான் அடிக்கடி என்மேல் பாசம் வந்துரும்னு சொல்லிகிட்டே சாப்பிட்டவன்...ஆ காரம் காரம் என்று சொல்லி அலறுகிறான்.அண்ணே பச்சை மொளகாயை சோத்துக்குள்ளே மடிச்சு வச்சுட்டியா என்னண்ணே உன் பச்ச மொளகா பாசம் என்று கத்தறான். என்னடா கதிர்.. எதுக்கு இப்படி செய்தேன்னு ஜீவா கேட்க... அப்போதுதான் நாம நிம்மதியா சாப்பிட முடியும். ஏதாவது கேட்டுகிட்டே இருக்கான்னு சொல்றான் கதிர்.