அடடே... இது புதுசா இருக்கே.. பாட்டு போட்டுக்கிட்டு லவ் பண்றதா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ஆர்ஜே செந்தில் களம். மாயன் செம!
ரெண்டு கலர் லுங்கி, எப்போதும் கூலிங் கிளாஸ்,கலர் கலர் சட்டை... நெத்தியில கருப்பு கோடுன்னு மாயனா ஒரு ரோல்..
டக் இன் ஷர்ட், பேன்ட் கண்ணாடின்னு டீசண்டா டாக்டர் அரவிந்த் ரோல்னு ரெட்டை வேஷத்துல நடிக்கறார் செந்தில்.
இதுல மாயனா காமெடி பண்றது,மதுரை பாஷை பேசி நக்கலடிக்கறதுன்னு நல்லா நடிச்சு இருக்கார்.விஜய் டிவி அவார்ட்ஸ்ல பெஸ்ட் ஆக்டர் அவார்ட் இவருக்குத்தான் கிடைச்சு இருக்கு.
மாயனின் பொண்டாட்டி தேவி டைவர்ஸுக்கு அப்ளை பண்ணி இருக்கா.. இருந்தாலும் ரெண்டு பேருக்குமே பிரிய மனசில்லை. தேவி ரொம்ப படிச்ச பொண்ணு..மாயன் படிக்காதவன்.ஒரு விபத்து மாதிரி நடந்த கல்யாணம்.
தனியா பேசணும்னு கூப்பிடறான் மாயன்... தேவியும் போயி உட்கார்ந்திருக்கா..அப்பாவின் அறுபதாம் கல்யாணம் பத்தி பேசறான் மாயன்.தேவி கேட்கறா..என் தம்பி ஏதாவது திட்டினா மட்டும் விட்டு குடுத்துட்டு போறியே ஏன்னு கேட்கறா.
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ங்க.. உங்களுக்கு உங்க தம்பியை ரொம்ப பிடிக்கும். உங்க தம்பியை நான் திட்டினா உங்க முகம் வாடும். உங்க முகம் வாடினான் மனசு வாடும்னு இவன் சொல்ல..நல்லா பேசறடான்னு தேவி சொல்லிட்டு எழுந்துக்கறா.
ஏங்க..உட்காருங்க.. இவ்ளோ தூரம் வந்துட்டு லவ் சாங்க் போடலேன்னா எப்படிங்கன்னு கேட்கறான்.அவள் நிற்க..கண்ணாலேயே ப்ளீஸ்னு கெஞ்சறான். தேவியும் உட்கார்றா. நேயர் விருப்பம்ங்கன்னு சொல்லிட்டு செல்போனில் பாட்டை போடறான்.
அய்ய்யயோ நெஞ்சு அலையுதுடி பாட்டை போட்டுட்டு மவுனமா பார்த்துகிட்டு லவ் பண்றாங்க..இது கூட நல்லாத்தான் இருக்கு.