Pandian Stores Serial: இதெல்லாம் குடும்பத்துல சகஜமப்பா...!
சென்னை: புதுமண தம்பதி என்றால் அவர்களுக்குள் நடக்கும் ஊடல் இருக்கிறதே...இதெல்லாம் குடும்பத்தில் சகஜமப்பா என்று அவரவர் கூறும்படி இருந்தாலும், ரொம்ப சுவாரஸ்யமானதாக இருக்கும். இதில் புருஷன்தான் எக்ஸ்ட்ராவா ஊடலுக்கு வழி வகுத்து தருவான்.
தன்னை நம்பி தனது வீட்டுக்கு வந்து இருக்கும் பெண்ணை, சீண்டி பார்ப்பதில் அலாதி ஆர்வம் இருக்கும் கல்யாணமான புது பசங்களுக்கு. மனைவி மனம் விட்டு பேசாத தருணமாக வேறு அது இருக்கும்.இதுதான் சாக்கு என்று மனைவியை சீண்டும் களத்தில் குதித்து விடுவார்கள்.
கதிர், சிங்கப்பூரில் இருந்து அக்கா வர்றாங்களா...அப்போ பாப்பாவும் கூட வரும். அப்பா.. எத்தனை நாளாச்சு பாப்பாவைப் பார்த்து...அவளுக்கு வேற என்னைத்தான் ரொம்ப பிடிக்கும் என்று தனக்குத்தானே புலம்பி பில்டப் கொடுக்கிறான் கதிர்.
கடைசி நாளில் திருப்பம்.. இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு
பாப்பா அழகா
காலையில் இருந்து கதிரின் இந்த அலப்பறையை பொறுக்க முடியாத முல்லை...ஏங்க..பாப்பா ரொம்ப அழகா என்று ஒரு ஆற்றாமையில் கேட்டுவிட்டாள். அவ்வளவுதான் கதிர் பாப்பாவை வர்ணிக்கிறான். அவள் தன்னிடம் எப்படி பேசுவாள் என்று கதை கதையாக சொல்கிறான்.
சீ இந்த மனுஷனிடம்
சீ இந்த மனுஷனிடம் போயா கேட்டோம்..ஒரேயடியா பேசறாரே என்று நொந்து போகிறாள் முல்லை. வரட்டும் அந்த பாப்பா எப்படித்தான் இருக்குதுன்னு நானும் பார்க்கறேன்னு நினைத்துக்கொண்ட முல்லை, அவர்கள் வருவதை எதிர்பார்த்து, ஹாலில் நிற்கிறாள்.
கார் சத்தம்
கார் சத்தம் கேட்க, முல்லையும் ஆவலாக வாசலைப் பார்க்கிறாள், அங்கு ஏற்கனவே தனம், மூர்த்தி மாமா, ஜீவா, மீனா என்று நிற்கிறார்கள். பின்னாலிருந்து வேகமாக வந்த கதிர், முல்லை நிற்கிறாள் என்று கூட பார்க்காமல், அவளின் தோள்பட்டையை ஒரு இடி இடித்துவிட்டு, வேகமாக வாசலை நோக்கி போகிறான்.
இப்படி போறாகளே
ஒரு சுற்று சுற்றி பின்னர் நின்ன முல்லை, என்ன இவுக... நான் நிக்கறது கூடாது தெரியாம இப்படி இடிச்சுட்டு போறாக.. அப்படி என்ன என்னைவிட பாப்பா உசத்தியா...எப்படித்தான் இருப்பா அந்த பாப்பா என்கிற கோவத்திலும் கூட வாசலை நோக்கி மும்முரமாகப் பார்க்கிறாள். கடைசியில் அது அக்காவின் மகள் குட்டி பாப்பாங்க!