Nila Serial: வயசு பொண்ணு இந்த டயலாக் பேசினா நல்லாவா இருக்கு?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா கதாபாத்திரம் நான் கல்யாணம் பண்ணிக்க கூடாது.. தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க கூடாதுன்னு நீலாம்பரி நினைக்கறான்னு தினம் தினம் டயலாக் பேசறா.
வயசுப் பொண்ணு.. இந்த டயலாக் பேசினால் முகம் சுளிக்கற மாதிரி இல்லை.
வர வர இந்த டிவி சீரியல்கள் நம்ம பண்பாடுகளை காற்றில் பறக்க விட்டு விடுகின்றன.
நிலா நீலாம்பரி
நிலாவுக்கு நீலாம்பரி எதிரியும். ஒரு வகையில் நீலாம்பரிதான் நிலாவுக்கு மாமியாரும் ஆகப் போகிறவர். நிலாவுக்கு கல்யாணம் ஆகக் கூடாது, அவளை அதற்குள் கொன்னுடனும்னு சதி செய்யும் பெண் நீலாம்பரி. ஆனால், இதை முறியடிச்சு கல்யாணம் செய்து காமிக்கணும்னு போராடுகிறாள் நிலா.
தாம்பத்ய வாழ்க்கை
சதியை முறியடிக்கும் ஒவ்வொரு நிலையிலும்தான் நிலா நான் கல்யாணம் செய்துக்க கூடாது. தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க கூடாதுன்னு நினைக்கறா நீலாம்பரி. அதை முறியடிச்சு நான் கல்யாணம் செய்துக்குவேன் என்று சொல்லி தாம்பத்ய வாழ்க்கை அனுபவிப்பேன் என்று ஒரு வயசு பொண்ணான நிலா போடும் சவால்தான் கதை.
எத்தனையோ விஷயம்
ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை வேணாம்னு தூக்கி நீலாம்பரி கிட்டே கொடுத்துட்டு வந்துட்டாங்க நிலா குடும்பம். இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லையாம். நீலாம்பரி கல்யாணம் செய்துக்க விட மாட்டேன்னு சொல்றதும், தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்க விட மாட்டேன்னு சொல்றதும்.. இப்படி வயசை கடந்த நீலாம்பரி கூட ஒரு முறைதானே சொன்னாங்க.
பலவித சவால்கள்
நான் கல்யாணம் செய்துக்குவேன்.. தாம்பத்ய வாழ்க்கை அனுபவிப்பேன்னு நிலா சொல்றது பல எபிசோடுகளாக நீண்டுகொண்டு இருக்கிறது. அந்த கல்யாணமும் உடனடியாக நடந்த பாடில்லை. தினம் தினம் இந்த டயலாக் மட்டும் பேசிக்கிட்டே இருக்கு இந்த பொண்ணு..
முகம் சுளிக்க வைக்கும் இந்த டயலாக்குக்கு முற்றுப்புள்ளி வச்சு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி வைங்கப்பா அந்த வயசுப் பொண்ணுக்கு!