மெல்ல வந்து மேலே விழ.. இடையைப் பிடித்து இழுத்து அணைத்த மச்சான்.. சொக்கிப் போன ஜனனி!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியல் மட்டுமே மாறுபட்ட சீரியலா இருக்கு.
மத்த எல்லா சீரியலிலும் ஆணவக்கொலை, கருப்பு நிறத்தை வெறுத்தல், பணக்கார பிள்ளைகளுக்கும், ஏழைப் பிள்ளைகளுக்குமான நட்பு, தறி நெய்பவர்களின் வாழ்க்கைன்னு ரொம்ப ஹெவி சப்ஜெக்ட்டா எடுத்துதான் சீரியல்கள் பண்ணிக்கிட்டு வர்றாங்க.
சீரியல் முழுக்க இப்படி ரொம்ப ஹெவியா இருக்கறதுனாலயோ என்னவோ, நிறைய பேர் பார்க்க விருப்பபடவில்லை.
பாரதி கண்ணம்மா.. நீயடி பொன்னம்மா... கருப்பு எனக்கு பிடிக்கும்மா!
குழந்தைகளுடன்
ஆஸ்ரம குழந்தைகளுடன் ஜனனி கண்ணை கட்டிக்கிட்டு விளையாடிக்கிட்டு இருக்கா. குழ்நதைகளும் ரொம்ப ஆசையா விளையாடிட்டு இருக்காங்க. அங்க சந்தோஷ் வந்து பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கான். திடீர்னு ஆண் ஒருவனை பிடித்து அவன் ஸ்பரிசம் பட, ஜனனி. கண்களை திறந்து பார்க்க.. அங்க சந்தோஷ்.
சும்மாதான்..
என்னங்க இதுன்னு சந்தோஷ் விளையாட்டாக கேட்க.. சும்மாத்தாங்கன்னு சொல்றா ஜனனி. அக்கா இந்த அண்ணா யாருன்னு ஒரு சிறுமி கேட்க, ஜனனி பதில் சொல்லாம நிக்கறா. நான்தான் இந்த அக்காவோட ஹஸ்பண்ட்னு சந்தோஷ் சொல்றன். அப்போ மாமா நீங்களும் எங்க கூட விளையாட வாங்கன்னு பசங்க கூப்பிடறாங்க.
விளையாடலாம்
ம்ம்..சரி வாங்க விளையாடலாம்னு சொல்றான் சந்தோஷ்.. அப்படீன்னா நீங்க பசங்க கூட விளையாடுங்க..நான் போறேங்கன்னு சொல்றா ஜனனி. பாருங்க பாப்பா உங்க அக்காவுக்கு தோத்துருவோம்னு பயம்னு சொல்ல, யாருக்கு பயம்.. விட்டு கொடுக்கறோம்னு ஜனனி சொல்ல, அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. வாங்க யார் ஜெயிக்கறாங்கன்னு பார்க்கலாம்னு சொல்றான் சந்தோஷ்.
விளையாட்டில்
கண்கட்டு விளையாட்டில், தன்னை ஒவ்வொருவரும் சீண்ட, தேடித் தேடி ஓடுகிறான் சந்தோஷ்..ஜனனியும் அவனை சீண்டிக்கொண்டு இருந்தவ, ஆல மரத்தின் விழுதுகளின் இடையில் செமையா மாட்டிக்கறா. சந்தோஷ் அவளைத் தொட முயற்சிக்க, அவள் ஸ்லிப்பாகி, சந்தோஷ் மேல் விழ. அவள் இடையைத் தாங்கிப் பிடிச்சு கண்களைத் திறக்கிறான் சந்தோஷ். ஜனனி.. இடை சந்தோஷ் கையில், உடலில் பாதி சந்தோஷின் மேல்.
முதல் ஸ்பரிசம்
இதுவரை நார்மலாக கூட ஜனனி தன் மேல் படாமல் இருக்க, இப்போதான் முதல் ஸ்பரிசம் இருவரையும் ஒரு மாதிரி பரவசம் அடைய செய்கிறது. கட்டின பொண்டாட்டியையே சந்தோஷ் சைட் அடிச்சுகிட்டு நிக்கறான்னா பாருங்களேன்..