Kaatrin Mozhi Serial: போட்டுத் தாக்கு அவனை முறத்தால போட்டுத் தாக்கு!
சென்னை: விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் கண்மணியை பாலியல் ரீதியாக ஒருவன் துன்புறுத்துவதை ரொம்ப மனம் நொந்து எழுதி இருந்தோம். கண்மணி வாய் பேச முடியாத பெண் அவள் ஒரு கயவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறாள். அவள் இன்று அந்த கயவனுக்கு கொடுக்கிறாள் பாருங்கள் சரியான பதிலடி!
இவள் மனம் விட்டுப் பேச வீட்டில் யாரும் இல்லை. இவளை வெறுக்கும் பாட்டி, முகத்தில் கூட விழிக்கக் கூடாது என்று கண்டிஷனோடு மனைவியுடன் வாழும் கணவன் என்று வாய் பேச முடியாத கண்மணியின் குடும்பம்.
அம்மா கொடுக்கும் தைரியம் ஒன்றினால் மட்டுமே வாழும் கண்மணி, தன்னை சிதம்பரம் தப்பாக தொட்டதை யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள் அழுதுகொண்டு இருக்கிறாள்.
கண்டுபிடிச்சுட்டாங்க அம்மா!
பெத்த அம்மாவாச்சே கண்மணியின் துயரத்தை அவள் வரைஞ்சு வச்சு இருந்த வரைபடம் மூலம் கண்டு பிடிச்சுட்டாங்க. சிதம்பரத்தை கேட்கிறான் வான்னு கண்மணியை கையைப் பிடிச்சு இழுக்க அவள் வேண்டாம் என்று சைகை காண்பித்து அழறா. உன்னை கேட்க யாரும் இல்லைன்னு நினைச்சுக்காத கண்மணி.அம்மா நான் இருக்கேன்.உங்க அப்பா நீ எங்க வீட்டு மகா லட்சுமின்னு கொண்டாடும் நாள் வரும்னு சொல்லி தேத்தறாங்க.
Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் செட்ல சரியான சாப்பாடுங்கறாங்க!
விஷயத்தை புருஷனிடம்
விஷயத்தை புருஷனிடம் சொல்ல, நீ என்ன சொல்லிட்டு என் கூட வாழ வந்தே.இந்த வீட்டில் அவள் ஒரு ஜடமாத்தான் இருக்கணும். என் கண்ணில் படவே கூடாதுன்னு சொன்னபிறகு அதுக்கு சம்மதிச்சுத்தானே என் கூட வாழற இப்போ திடீர்னு நம்ம பொண்ணு வந்து கேளுங்கன்னு சொல்றே. என்னை பொறுத்த வரைக்கும் என் மகன் மட்டும்தான் பிள்ளை. கடமைக்கு ஒரு பொண்ணை வளர்த்துக்கிட்டு இருக்கேன். கடைசியில இவ இந்த வீட்டில் பிண்டம் மாதிரிதான்னு சொல்லிட்டு போறார்.
சிதம்பரம் வீட்டுக்கு
சிதம்பரம் வீட்டுக்கு மறுபடியும் பால் கொண்டு போகணுமே என்கிற கவலையில் இருக்கும் கண்மணிக்கு கைக்கொடுக்கிறாள் தோழி.வா என்று கூடவே அவளை அழைத்துச் சென்று இவனுக்கு நீ என்ன தண்டனை கொடுக்க நினைக்கிறியோ அதை குடு கண்மணின்னு சொல்றா.
சிதம்பரத்தை கண்மணி
சிதம்பரத்தை கண்மணி முதலில் கையால் அடிச்சுட்டு, பிறகு முறத்தை எடுத்து வந்து அதால் அடிச்சு வெளுத்து வாங்குகிறாள். அதை வீடியோ எடுக்கும் தோழி.. இனிமேலும் வாலாட்டின, இதை சோஷியல் மீடியாவில் போட்டு ஹேஷ்டேக்காகி விடுவேன்னு மிரட்டறா.
இந்த காலத்துக்கு இந்த தைரியம்தாங்க பொண்ணுங்களுக்கு வேணும்!