Kaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க!
சென்னை: மனித இனத்துக்கு குரல் என்பது உண்மையில் காற்றின் மொழிதான். நமது உடலின் பிராண சக்தியோடு நாம் பேச முயற்சிப்பதுதான் குரலும், பேச்சும்.
ஆனால், இங்கு கண்மணிக்கு பேச்சு வரவில்லை... பொம்பளைப் பிள்ளை வேற. இதனால் பெற்ற அப்பாவும், பாட்டியும் அவளை வெறுக்கறாங்க. இவங்களுக்கு பிடிச்சது ஆண் பிள்ளையும், முதலில் பிறந்த பெண் பிள்ளையும்தான்.
புதுசா வேலைக்கு போனா கண்மணி குழந்தை முகத்தில் விழிச்சுட்டு போனதனுனால வேலை கிடைக்காதாம். இப்படி பல விஷயத்துல பொம்பளைப் பிள்ளையை கொடுமை பண்ணி போரடிக்கறாங்க.
குழந்தையை கருவில்
குழந்தையை கருவில் அழிச்சுட முடிவு செய்து மருந்து கொடுத்தும் கண்மணி நல்ல படியாக பிறந்துவிடுகிறாள். மருந்து கொடுத்ததில் எதுவும் பிரச்சனை வந்திருச்சா என்று கூட குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சோதனை செய்யாமல் குழந்தைக்கு பேச்சு வராதுன்னு ஒரே வார்த்தையில் சொல்லி அனுப்பறாங்க..
செல்லம் ஆண் குழந்தை
புதுசா வேலை கேட்டு போகப்போறே என் பேரன் முகத்துல முழிச்சுட்டு போடான்னு அம்மா சொல்ல, எங்கே அவன்னு தேடிகிட்டு வெளியில் வர்றார் அப்பா. பார்த்தால் பவம் பேச முடியாத ராசி இல்லைன்னு சொல்ற கண்மணி எதிரில் வர்றா. பாவ,ம் குழந்தை பயத்தில் பால் கேனை கூட கீழே போட்டுட்டு நிக்குது.
கிடைச்சுருது கிடைக்கலை
வேலை கேட்டுப்போன பெரிய கம்பெனியில் வேலை இல்லேன்னு சொல்லிடறாங்களாம். எல்லாம் அவ முகத்தில் முழுச்சதுன்னு சொல்லிகிட்டே வர. அதே கம்பெனியின் முதலாளி அம்மாவின் கார் வழியில நின்னு போகுது. அதை இவன் சரி செய்ய, இவங்க சிபாரிசில் அதே கம்பெனியில் வேலை கிடைக்குது.
அப்போது சொல்றான்.. என் பையன் பிறந்த நேரம்தான் என்னை வாழ்க்கையில் உயர உயர கொண்டு போகுதுன்னு சந்தோஷப்படறான். இதை பார்க்கையில் நமக்கு கஷ்டமா இருக்கு.இப்படிப்பட்ட குழந்தைகளை வெறுக்கும் பெற்றோர் இன்னுமா இருக்கிறார்கள்?