Kalyana Veedu Serial: கல்யாணமாகி ஒரு வருஷத்துக்குள்ள குழந்தை இல்லேன்னு கவலையா?
சென்னை:சன் டிவியில் கல்யாண வீடு சீரியலில் ஒரு நடுத்தர வர்க்கக குடும்பத்தில் மூன்று தங்கச்சிங்களை வைத்துக்கொண்டு ஒரு அண்ணன் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் கதை.
இது போன்ற கதை திருமுருகனுக்கு அல்வா சாப்பிடற மாதிரி, மக்கள் எதிர்பார்ப்புக்கு மேல் அதிகமாகவே கொடுத்து விடுவார்.இப்படி தனது சீரியல்களை ரசிக்க வைப்பதில் திருமுருகன் ஸ்பெஷல் என்று சொல்லலாம்.
சின்னத்திரையில் தங்கை சென்டிமென்ட் , குடும்ப சென்டிமென்ட் என்று பிழிந்து எடுத்து கதை கொடுப்பார்.
மகளிர் மருத்துவர்
டெல்லியில்வசித்து வந்த கோபியின் குடும்பம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாருக்கே வந்து விடுகிறான் கோபி, தனது இரண்டு தங்கைகளை கட்டிக் கொடுத்ததும் திருவையாரில்தான். முதல் தங்கையை கலாவின் பையனுக்கு கட்டிக் கொடுத்து. அவள் மாமியார், தனது தங்கையுடன் சேர்ந்து படுத்திய கஷ்டங்கள் கொஞ்சம் இல்லை.
Roja Serial: ஆமாம் அனு ...நான் ஜெயிக்கற கூட்டணிதான் கல்பனா பொங்கல்!
அறை கூட இல்லை
இருவரும் சுதந்திரமாக இருக்க தனியான அறை கூட இல்லை.இப்படிப்பட்ட நிலையில், கல்யாணமாகி ஒரு வ்ருஷமாச்சு. இன்னும் வயித்துல புள்ளையை காணோம்னு கலாவின் தங்கச்சி கிளம்பி விட, மாமியார் கலாவுக்கு அப்போதுதான் உரைக்கிறது.என்னடி என் தங்கச்சிகிட்டே எதுக்கு கோச்சுக்கறே..அவ சொல்றது உண்மைதானே ஒரு வருஷமாகியும் இன்னும் ஒண்ணுமில்லையே இதுக்கு யாருகிட்ட போயி நியாயம் கேட்கறதுன்னு அவங்களும் திட்டறாங்க.
குழந்தை இல்லை
அண்ணே மாமியாரும், சின்ன மாமியாரும் சேர்ந்துக்கிட்டு, கல்யாணமாகி ஒரு வருசமாகியும் இன்னும்குழந்தை இல்லையேன்னு திட்டிகிட்டே இருக்காங்கண்ணே என்று கோபியிடம் வந்து தங்கை கண்கலங்க துடித்துப் போகிறார் அண்ணன் கோபி.உள்ளூரில் இருக்கும் மகளிர் நல மருத்துவரிடம் சென்று பேச.தங்கச்சிக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சுன்னு கேட்கறாங்க டாக்டர்.
வருஷம் முடிஞ்சுருச்சு
ஒரு வருஷம் முடிஞ்சுருச்சு டாக்டர்னு கோபி சொல்ல, ஒரு வ்ருஷம்தானே அகி இருக்கு. அதுக்குள்ளே குழந்தை இல்லேன்னா எப்படி. இப்பொதெல்லாம் குறைந்தது 3 வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பெத்துக்கணும்னு பிளான் பண்றாங்க என்று டாக்டர் சொல்ல, இல்லை டாக்டர் இவங்கஅப்படி ஓண்ணும் பிளானில் இல்லைன்னு கோபி சொல்றான்.
பிரைவசி இருக்கா?
அந்த கல்யாண ஜோடிக்கு வீட்டில்பிரைவசி இருக்கான்னு டாக்டர் கேட்கறாங்க.அவ்வளவுக்கு இல்லை மேம்னு கோபி சொல்ல, எங்கியாவது தனியா போயி.புருஷன் போடாட்டியா தங்கி இருக்கங்களான்னு கேட்க, இல்லை மேம் வீட்டை விட்டு எங்கேயும் போகலைன்னு சொல்றாங்க. வீட்டிலும் பிரைவசி இல்லை..கூட்டு குடும்பம் வேற.
எப்படி சார் இப்படி அன்யோன்யம் இல்லாமல் இருந்தால் அந்த ஜோடிக்கு குழந்தை பிறக்கும். முதலில் அவங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பி வைங்க. ஜாலியா இருந்துட்டு வரட்டும். வீட்டிலும் அவங்களுக்கு பிரைவசி குடுக்க ஏற்பாடு செய்ங்க. அப்புறமா என்னை வந்து ரெண்டு பேரையும் பார்க்க சொல்லுங்கன்னு சொல்றாங்க டாக்டர்.
இந்த காட்சி நிஜமா சமூகத்துக்கு தேவியான கட்சிதானே!