Kalyana veedu serial: அடேய் நந்தகுமார் சூர்யாவுக்கு எத்தனை மாப்பிள்ளைடா?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ரொம்ப பரபரப்பா ஒரு கல்யாணம் நடந்து முடிந்து இருக்கிறது.கோபியின் தங்கை சவீதா, பிச்சை மணி கல்யாணம் முடிந்த கையோடு, ஸ்வேதாவை கோபிக்கு கல்யாணம் செய்துவைக்க முனைப்புடன் இருக்கான் ஸ்வேதாவின் அண்ணன் நந்தகுமார்.
பதிலுக்கு ஒரு பெண் குழந்தையுடன் புருஷன் கைவிட்டுட்டு போன கோபியின் தங்கை அனுசூயாவை தான் கல்யாணம் செய்து வாழக்கை கொடுப்பதாவதும் சொல்கிறான் நந்தகுமார்.
கோபியும் சூரியாவும் காதலித்தாலும், இந்த காதல் கை கூடி வராமல் கண்ணா மூச்சு ஆடுகிறது. கோபியின் தங்கை அனுசுயா நீ ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்கோ ,இல்லை சூர்யாவை கல்யாணம் செய்துக்கோ. என்னை இதுல இழுக்காதே.. எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு சொல்றா.
Minnale serial: அடுத்தவன் பொண்டாட்டி கழுத்தில் தாலி கட்டலாமா?
கோபி சூர்யா
சவீதாவின் கல்யாணத்தில் எல்லாரும் சந்திச்சுக்கறாங்க. அப்போ, ரோஜா கோபி, சூர்யாவை இணைச்சு வச்சு கல்யாண பேச்சு பேச ஆரம்பிக்க கோபி, நான் ஸ்வேதாவுக்கு வாக்கு கொடுத்துட்டேன்னு சொல்லிடறான்.இதுக்கு எல்லாம் காரணம் ஸ்வேதாவின் அண்ணன் நந்தகுமாரனின் கைவரிசைதான்னு ரோஜா தெரிஞ்சுக்கறா.
சிங்கப்பூர் மாப்பிள்ளை
கோபியைப்பத்தி இல்லாததும், பொல்லாததும் சொல்லி, அவரை மகளுக்கு வேறு மாப்பிள்ளை ஏற்பாடு செய்ய செய்துடறான் நந்தகுமார். இப்போது கோபிக்கு தன தங்கச்சியை கல்யாணம் செய்து வைப்பதில் எந்தவித தடங்கலும் இருக்காது என்று நினைத்து இந்த வேலைகளை செய்யறான் நந்த குமார்.
ஏற்கனவே சூர்யாவுக்கு
ஏற்கனவே சூர்யாவுக்கு பார்த்த எத்தனையோ மாப்பிள்ளைகள் தள்ளி தள்ளி போக, அவள் ஆசைப்பட்டது கோபியின் மேல்தான் .ஆனால் ,நந்தகுமார் பேச்சை கேட்டுகிட்டு, அப்பா சிங்கப்பூர் மாப்பிள்ளை ஒருத்தனை ஏற்பாடு செய்ய, அவன் கோபிக்கு தெரிந்த ஃபிராடு மாப்பிள்ளை .இப்போதும் நந்த குமாருக்கு பல்ப்.
தேடித் போயி
கோபியின் சொந்தக்காரர் ஒருத்தர் வந்து சிவகாமி அம்மா பொண்ணை கேட்க, என் எல்லா பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்றாங்க சிவகாமி அம்மா. ஆனால், போன அவரை துரத்திக்கிட்டே போயி, நீங்க கேட்கற மாதிரி ஒரு பொண்ணு இருக்குதுங்க.பேரு சூரியா அந்த பொண்ணை போயி பாருங்கன்னு சொல்லி அனுப்பிட்டு, அப்பா நம்ம தங்கச்சி ரூட் எப்படியாவது கிளியர் ஆனா சரின்னு சொல்லிக்கறான் நந்தகுமார்.
பாவம் இல்லை அந்த சூர்யா பொண்ணு.. எத்தனை மாப்பிள்ளைடா அவளுக்கு நீ பாரப்பே?