பார்றா ... கிராமத்து கதைன்னு சொல்லிட்டு... பாரம்பரியத்தை அசைச்சு பார்க்கறாங்க!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் ஒரு தெலுங்கு படத்தின் லொக்கேஷன் போல இருக்கு. அவ்ளோ கலர்ஃபுல்லா இருக்கு சீரியலின் படப்பிடிப்பு காட்சிகளும், டெக்னீஷியன்ஸ் கைவண்ணங்களும். கொஞ்சம் மெனக்கெடறாங்க போலத்தான் தெரியுது.
ஆனா, கதையில அவ்ளோ கவனம் காமிக்கலையோன்னு சொல்ற அளவுக்கு நேத்து எபிசோட்ல ஒரு காட்சி. ஏதோ புதுசா செய்யறோம்னு சொல்லிட்டு நம்ம சடங்கு சமபுரதாயங்களை மீறி சீன் வச்சா அது தப்புதான்.
இப்போ நகரத்துல கூட சடங்கு சம்பிரதாயங்களை மீறுவதில்லை. அதுவும் கிராமத்து கதையில போயி இப்படி செய்துட்டீங்களே டைரக்டரே...
Radhika Record: 3430 மணி நேரம்.. 6850 எபிசோடுகள்.. ராதிகாவின் அடேங்கப்பா தெறி சாதனை!
குறித்து குறி
மகள்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க குறி கேட்க போறாங்க, கண்ணனின் அக்காவும், மாமாவும். சாமி குறி சொல்றார், வள்ளி கல்யாணத்தை கூத்தா நடத்துங்க, வள்ளிக்கும், முருகனுக்கும் திருக்கல்யாணம் பண்ணி வைங்கன்னு.
டிவிஸ்ட்
அப்புறம் வைக்கறார் பாருங்க ஒரு பன்ச். ஏழை கன்னி பொண்ணுக்கு கூரைப் புடவை, தாலி, மஞ்சள், குங்குமம் வாங்கி குடுங்க. உங்க பொண்ணு சவுந்தர்யா மனம் போல மாங்கல்யம் அமையும்னு.
முன்பே தாலி
எந்த வீட்டுலயும், இதுதான் பொண்ணு, இதுதான் மாப்பிள்ளைன்னு சொல்றதுக்கு முன்னால தாலி வாங்குவதில்லை. முடிவான பின்னர் அவரவர் குடும்ப வழக்கத்துக்கு ஏற்ப தாலி வாங்குவதுதான் சம்பிரதாயம்.
வீட்டு உரிமை
தாலி, கூரைப் புடவை வாங்குவது என்பது மாப்பிள்ளை வீட்டு உரிமை. இதை அதுவும் மாப்பிள்ளை யார்னு தெரியாமலே, மாப்பிள்ளை வீட்டு சார்பா நாங்க வாங்கி குடுக்கறோம்னு, சின்னவர் கண்ணன் கொண்டு வந்து ஒரு கன்னிப் பெண்ணான முத்து செல்வி கையில் அக்காவே கொடுக்க சொல்லி கொடுப்பது அபத்தம் இல்லையா?
கன்னி பையன்
அதுவும், கண்ணனும் கல்யாணமாகாத கன்னிப் பையன். அவர் கையால ஒரு பொண்ணுக்கு தாலியும், கூரைப் புடவையும் குடுத்தா என்ன அர்த்தம் ஆகும்? பண்பாட்டை சீர் குழைச்சுடாதீங்க அப்பு.