Kanmani serial: சென்னையில் இருந்து கண்ணனுக்கு விஷ ஊசி வருதாம்...அப்ப சவுண்டோட கல்யாணம்?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவுக்கும் , கண்ணனுக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. கூடவே, வளர்மதிக்கும் ,ஆகாஷுக்கும் கூட ஒரே மேடையில் கல்யாணம்.
ஆனால், சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும் கல்யாணம் நடக்க கூடாதுன்னு ஆகாஷ் அம்மா வளர்மதியின் அம்மா கிருஷ்ணவேணியிடம் சொல்ல ,கண்ணன்,சவுந்தர்யா கல்யாணத்தை நிறுத்த பிளான் போடறாங்க.
ஒரு ஊசியைப் போட்டு கண்ணனை கல்யாணத்துக்கு கூட எழுந்திரிச்சு நடக்க முடியாதபடி மயக்கத்தில் ஆழ்த்தி விடுவதுதான் திட்டம்.
மாமா கல்யாணம்
என்ன சவுண்டு நான் கல்யாணம் நடக்கப் போற குஷியில் சுத்திகிட்டு இருக்கேன்..நீ என்னடான்னா உம்முன்னு இருக்கே... ஜாலியா மாமன் மாதிரி இருக்கணும்னு கண்ணன் சொல்ல, பின்னால் அவுட் ஆஃப் ஃபோகஸில் முதலில் கிருஷ்ணவேணி முறைச்சுகிட்டே நடந்து போறாங்க.
கவலையா இருக்கு
எப்படி மாமா சந்தோஷமா இருக்க முடியும். நேத்து சுமங்கலி பூஜையில் நடந்ததை நினைச்சா கஷ்டமா இருக்கு மாமான்னு சவுந்தர்யா சொல்ல, இதே போல அவுட் ஆஃப் ஃபோகஸில் முதலில் பெரிய அத்தையும், சின்ன அத்தையும் முறைச்சுகிட்டே நடந்து போறாங்க.
மாமன் பார்த்துக்குவேன்
அதெல்லாம் இந்த மாமன் பார்த்துக்கறேன்... சவுண்டு.நீ எதுக்கு கவலைப்படறேன்னு கண்ணன் சொல்லும்போது அவுட் ஆஃப் ஃபோகஸில் பெரிய அத்தை அவங்க புருஷன், மகன் எல்லாரும் முறைச்சுகிட்டே நடந்து கடந்து போறாங்க. எனக்கு கவலையா இருக்கு மாமா.இந்த கல்யாணம் நடக்கலே..என்னால தாங்கிக்க முடியாது மாமான்னு சொல்றா சவுந்தர்யா.
நோ கவலை பொண்டாட்டி
கவலைப்படாதே பொண்டாட்டி.. அப்படியே கல்யாணத்துல எதாவது குளறுபடி நடந்தாலும், மதுரை வீரன் பொம்மியைத் தூக்கிகிட்டு போயி கல்யாணம் செய்துக்கிட்டது போல,உன்னைத் தூக்கிகிட்டு போயி தாலி கட்டுவேன்னு சொல்றான் கண்ணன்.
தேங்க்யூ கணவான்னு கண்ணனை கட்டிக்கறா சவுந்தர்யா.இப்போது அவுட் ஆஃப் ஃபோகஸில் சவுந்தர்யாவின் அக்காக்கள், அம்மா ரெண்டு பேரையும் சிரிச்சுகிட்டே கடந்து போறாங்க. ஒரே காட்சியில் இந்த ப்ரோமோ நன்றாக இருந்தது.
கண்ணன் தப்பிச்சு எப்படித்தான் கல்யாணம் நடக்குது, பார்க்கலாம்.