முத்துச்செல்வி நெற்றியில் சின்னவர் வச்ச குங்குமம் .. அழியாம இருக்க ஒரு செம ஐடியா... இது புதுசு!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சின்னவர் தன் நெத்தியில் வச்ச குங்கும பொட்டை அழிக்காமல் இருக்க முத்து செல்வி செய்யும் சூப்பர் ஐடியா.
சின்ன கவுண்டர் படத்தை பார்த்தது போல இருக்குங்க. பொட்டு வைக்கற விளையாட்டும், பம்பரம் விடும் விளையாட்டும்.
ஆமா... மக்கள் இதை எல்லாம் ரசிக்கத்தான் செய்யறாங்களா? வேற வழி... குடுக்கறதை பார்க்கணும், கிடைக்கறதை சாப்பிடணும்...!
நார்த்லதான் சுவீட் முதலில்.. நாமெல்லாம் சாப்பிட்டு முடிச்சப்புறம்தான்... பிரசன்னா
குங்குமத்தை வை
இந்த விளையாட்டு தமிழ் சினிமாவுல கூட வரலைதான்... பாராட்டலாம். அதாவது கண்களை கட்டிக்கணும். கையில குங்குமத்தை வச்சுக்கிட்டு, கண்ணாமூச்சி மாதிரி விளையாடி கையில கிடைக்கறவங்க நெத்தியில போட்டு வைக்கணும்.
விளையாட்டு
முத்து செல்வி இந்த விளையாட்டை விளையாட தயாராக, அங்கு சின்னவர் கண்ணன் வருகிறார். சின்னவரே நெத்தியில குங்குமம் வைக்கற விளையாட்டு வரீங்களான்னு கூப்பிட, இங்கார்ர்ரா இது என்ன புள்ள பொட்டு வைக்கற விளையாட்டுன்னு சின்னவர் கேட்கறார்.
படம் பார்க்கலை
சின்னவரே சின்ன கவுண்டர் படமெல்லாம் பார்க்கலையா... கண்ணைக் கட்டிக்கிட்டு, நெத்தியில பொட்டு வைக்கணும். தோத்துட்டா வயித்துல பம்பரம் விடணும்னு சொல்ல, சின்னவர் விளையாட ரெடியாகறார்.
கையிலத்தான்
சின்னவர் முத்து செல்வி நெத்தியில் பொட்டு வைத்துவிட, அங்கதான் டச்சிங் சீன் ... முத்து செல்விக்கு மட்டும் மனசுல படபட..பம்பரம் வேண்டாம் சின்னவரேன்னு முத்து செல்வி கட்டிலில் படுத்து முகத்தை மூடிக்கொள்ள, பம்பரத்தை எடுக்கிறார் சின்னவர்.
பன்ச்
அவர் ரொம்ப நல்லவராச்சே.. பம்பரத்தை சுற்றி கையில் எடுத்து, முத்து செல்வியின் கையில் சுத்த விடுகிறார். அப்புறம் சின்னவர் பேசும் பன்ச்... புள்ள இதெல்லாம் சும்மா விளையாட்டுத்தான். வேற எதுவும் உள்குத்து இல்லைன்னு சொல்லிட்டு போயிடறார்.
அழியுமே
இப்போ வருவோம் விஷயத்துக்கு முத்து செல்விக்கு சின்னவர் மேல ஒரு இது போல காட்சிகள் அமைய, தன் நெற்றியில் இருக்கும் பொட்டு அழிய கூடாதுன்னு குளிக்காம இருக்கா முத்து செல்வி. அக்கா நீ போற ரூட் சரியல்ல சிறுமியான தங்கை சொல்ல, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைடி. சின்னவர் வச்ச பொட்டு அழியக் கூடாதுன்னு மட்டும்தான்.
சூப்பர் ஐடியா
எத்தனை நாளைக்குக்கா குளிக்காம இருப்பேன்னு தலையில அடிச்சுகிட்டு சிறுமி போக, சின்னவர் வச்ச பொட்டை எப்பவும் பார்த்துகிட்டே இருக்கணும். அவ்ளோதானே... ஒரு ஐடியான்னு சொல்லிட்டு, டிரங்கு (ஏழைப் பெண் பாவம்) பெட்டியில ஒரு வெள்ளை துண்டை எடுத்து மடித்து அதை தனது நெற்றியில் இருக்கும் குங்குமத்தில் ஒத்தி எடுக்கிறாள். எப்படி இந்த சூப்பர் ஐடியா?
நல்லாத்தான்பா யோசிக்கிறாய்ங்க...!