Kanmani Serial: குடும்ப குத்து விளக்கு.. குத்து விளக்கை தூக்கி போடறதா?
Recommended Video
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் நன்றாக வாழ்ந்து பெண்ணுக்கு கல்யாணமும் செய்துவிட்ட பெரிய மனுஷி குத்து விளக்கைத் தூக்கி எரியறாங்க.
அதை செய்தால் சகுனத் தடை, இதை செய்தால் குடும்பத்துக்கு ஆகாது.. இப்படி எல்லாம் தேவை இல்லாமல் மூடநம்பிக்கைகளை வளர்ந்துவிடும் தொலைக்காட்சி சீரியல்கள், சில கெட்ட விஷயங்களை காண்பிக்கும் போது எரிச்சலில் கேள்வி கேட்க தோன்றுகிறது.
தனது மகள் வளர்மதி புகுந்த வீட்டுக்கு போகிறாள் என்றதும், கண்ணனின் அக்கா விஜயலட்சுமி வளர்மதிக்கு குத்து விளக்கு கையில் கொடுத்து அனுப்பறாங்க.
குத்து விளக்கு விஜயலட்சுமி
வளர்மதி இந்த வீட்டுக்கு நான் மருமகளா வந்த போது இந்த குத்து விளக்கைத்தான் ஏத்தினேன். உங்க அம்மா, என் பொண்ணுங்க எல்லாரும் ஏத்தின குத்து விளக்கு இது. இனிமே உன்கிட்டே இருக்கறதுதான் முறை. நீ எடுத்துட்டு போன்னு விஜயலட்சுமி சொல்ல, வளர்மதியும் ஆசையா விளக்கை கையில் வாங்கறா.
அம்மா பிடுங்கி
வளர்மதியின் அம்மா அந்த குத்து விளக்கை மகளின் கையில் இருந்து பிடுங்கி தூக்கி எறியறாங்க. அந்த குத்துவிளக்கு அனாமத்தா கீழே விழுது. இதை பார்த்தால் நிஜமா பகீர்னுதான் இருக்குது. நல்ல வாழக்கை வாழ்ந்த ஒரு குடும்ப பெண்ணாக இருக்கும் அம்மா இதை செய்வாங்களா?
கண்ணன்தான் விளக்கை
இதை பார்த்து பெண்கள் எல்லாரும் பதறி நிற்க, கண்ணன்தான் என்ன இப்படி பண்றீங்கன்னு கேட்டுட்டு அந்த குத்து விளக்கை எடுக்கறான். அந்த இடத்தில் குத்து விளக்கின் அருமை பெருமை பற்றி கொஞ்சம் பேசி இருக்கலாம்.
மூட நம்பிக்கை
தேவை இல்லாத மூட ன் நம்பிக்கைகளை வளர்த்து விடுவதும் இந்த தொலைக்காட்சி சீரியல்கள்தான். பெண்கள் செய்ய அஞ்சும் காரியங்களை செய்ய வைப்பதையும் இந்த தொலைக்காட்சி சானல்களின் சீரியல்களில்தான் பார்க்கலாம். இதை எல்லாம் கொஞ்சம் மாத்திக்கோங்க!