Kanmani Serial: சின்னவர் ஆக்ஷன் ஹீரோவா மாறப் போகிறார்!
சென்னை: என்னதான் சொல்லுங்கள் சின்னக் கவுண்டர் படத்துக்கு இன்று வரை ஈடு இணை என்று எந்த படமும் இல்லை. அதில் விஜயகாந்த் சின்ன கவுண்டரே என்று அழைக்கப்படுவார்.
சன் டிவியின் கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் சின்னவரே என்று அன்பாய் அழைக்கப்படுகிறார். இவரும் சின்னக்கவுண்டர் போல வேட்டி சட்டைதான் எப்போதும். அவ்வப்போது சின்ன கவுண்டர் சீன்களை நினைவு படுத்துகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்து தடம் புரளாமல் கதையை ஒரே டிராக்கில் நிதானமாக கொண்டு போகிறார் இயக்குநர்.
ஜெயிலில் அக்கா
அக்கா வீட்டில் இருக்கும் வரை, மற்றவர்கள் எது சொன்னாலும் பொறுமையாக இருந்தே பழக்கப்பட்ட கண்ணனுக்கு, அக்காவை தான் இல்லாத நேரத்தில் போலீஸ் பிடித்து செல்ல வீட்டினர் அனைவரும் விட்டு விட்டனர் என்று கோபம் வருகிறது பாருங்கள். நனறாக இருந்தது அந்த காட்சி.
சவுண்டு புரியுதா
இப்போ புரியுதா சவுண்டு...நான் ஏன் என்னை ஒண்ட வந்த பிடாரின்னு திட்டியும் கேட்டுகிட்டு இருந்தேன்னு. அக்காவுக்கு மாமாவுக்கு அடுத்து நான்தான் சவுண்டு பாதுகாப்புக்கு இருந்தேன். அதுக்காகத்தான் இவங்க என்ன திட்டினாலும் கேட்டு, ரோஷம் இல்லாம இருந்தேன் .நீ கூட உனக்கு ரோஷம் இல்லையான்னு கேட்டே..இப்போ புரியுதான்னு அழுதுக் கொண்டே கண்ணன் பேசுவது கலங்க வைத்து விட்டது.
சின்ன அத்தை
சின்ன அத்தையை எதிர்த்து பேசும் போது, தனது அக்காவை ஜெயிலுக்கு அனுப்பிய ரோஷம் தெரிகிறது. பாலில் விஷத்தை கலந்து கொடுத்தது யாருன்னு மட்டும் தெரியட்டும் .அப்புறமிருக்கு மவனே அவனுக்கு கச்சேரி என்று சொல்லும்போது கண்ணன் ஆக்ஷன் ஹீரோவாகவும் களம் இறங்கப் போகிறார் என்று தெரிகிறது.
ஆகாஷ் வளர்மதி
வளர்மதி தன் புருஷன் ஆகாஷ் சவுந்தர்யாவுடன் போனில் பேசுவதை கேட்டுவிட்டு, அவனிடம் சண்டை போடுவதே மாட்டிக்கிட்டான் ஆகாஷ்னு நினைக்க தோன்றுகிறது.அது மட்டுமில்லாமல், பசிக்காத அவனை டேபிள் முன் உட்கார வைத்து சாதத்தை தட்டு நிறைய போட்டு ,ஊட்டிவிடும் காட்சி, அவளை சைக்கோவாக்கி கதையை கொண்டு போவது போல எண்ண வைக்கிறது. என்னாகுமோ!