For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kanmani Serial: எதையும் மண்டையில் ஏத்திக்காத ஏழைங்க மனசு முத்துச்செல்வி மாதிரிதான்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணன் வாழ்க்கையில் இடையில் வந்த முத்துச்செல்வி, இப்போது அவனது வாழ்க்கைக்கு இடைஞ்சல் தராமல் பாதியில் விலகிவிட்டாள்.

ஆனால், அவள் கொளுத்திப்போட்டுவிட்டு போன விஷயங்கள்மட்டும் தீயாய் பத்திகிட்டு எரிஞ்சுகிட்டு இருக்கு இன்னும் அந்த வீட்டில்.

ஆனால் முத்துச்செல்வி கொளுத்திப்போட்ட நெருப்பு, தர்மராஜ் வீட்டில் இன்னும் நெருப்பாக எரிஞ்சுக்கிட்டு இருக்கு. அதை எதையும் மண்டையில் ஏத்திக்காத அவள்,இன்னொரு வீட்டில் அடைக்கலம் புகுந்து, குடும்பத்தோட இருக்கா..

தர்மராஜ் பெரியவர்.

தர்மராஜ் பெரியவர்.

வீட்டில் நடந்த பல விஷயங்களில் மனக்கலக்கம் அடைந்த தர்மராஜ் ஐயா, தான் உயிரோடு இருக்கும்போது கண்ணன்தான் கார்டியனாக இந்து சொத்துக்களை காக்க வேண்டும் என்று மனைவியின் தம்பியை, தனக்கு அடுத்த இடத்தில் வைத்து மதிப்பு தர்றார். ஆனால், பாருங்க பலப் பிரச்சனைகள் தன்னை சுற்றி இந்த வீட்டில் நடந்துகொண்டு இருக்க, மாப்பிள்ளையின் திருட்டு செயலை கண்டுபிடிக்கப்போன அவரின் உயிர் ஹார்ட் அட்டாக்கில் பிரிஞ்சுருது.

தாங்க இயலா இழப்பு

தாங்க இயலா இழப்பு

பெரியவர் தர்மராஜின் இறப்பு அனைவருக்கும் தாங்க முடியாத இழப்பு என்றாலும், வீட்டில் தங்கைகள்,த ம்பி பொண்டாட்டிகள் இந்த பெரியவரின் இழப்பை பயன்படுத்திக்கத்தான் நினைக்கறாங்க. இதை எல்லாம் பார்க்கும்போது இந்த கூட்டுக குடும்பம் கஷ்டம்டா சாமி என்றுதான் நினைக்க வைக்குது.என்னத்தை கண்டார் அந்த மனுஷன், துரோகத்தைத் தவிர.

இப்போது கண்ணன்

இப்போது கண்ணன்

குடும்பத்துக்காக உழைத்த தர்மராஜ் மனைவியின் தம்பி கண்ணன், இப்போது அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுபவன் ஆகிறான். விஜய லட்சுமி பெற்ற பெண்கள் மட்டும்தான் அவன் மீது அளவில்லா பாசம் வைத்து,அம்மாவுடன் சேர்ந்து அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள். தர்மராஜின் தம்பி மனைவி கிருஷ்னவேணி கணவரை மிரட்டி அதிகாரத்தை கையில் எடுத்து குடும்பத்தை பிரிக்க நினைக்கிறார். கண்ணனையும் ஓரம் கட்ட நினைக்கிறார்..

 குடும்பமாக முத்துச்செல்வி

குடும்பமாக முத்துச்செல்வி

குடும்பமாக முத்துச்செல்வி இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் அடைக்கலம் புகுந்துடறா. கண்ணன் வீட்டில் தனக்கு எடுத்து கொடுத்த நகைகளை காணோம் என்கிற பெரிய குற்றச்சாட்டை தர்மராஜ் வீட்டில் கொளுத்திப் போட்டுவிட்டு,அதே திருட்டுப் பட்டத்துடன் கண்னன் சவுந்தர்யா இனி சேர்ந்து வாழ்வாங்க என்கிற நம்பிக்கையில், புது வாழ்க்கை வாழ ஆரம்பிச்சு இருக்கா முத்துச்செல்வி.

இதுதாங்க ஏழையின் மன நிலை...எ தையும் மண்டையில ஏத்திக்கிட்டு கஷ்டப்பட மாட்டாங்க

English summary
Muttuchelvi, who came to Kannan's life on Sun TV's kanmani Serial, has now quit halfway through her life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X