For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Kanmani serial: சவுண்டை நான் கல்யாணம் செய்துக்கறேன்... முகத்தில் சந்தோஷம்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் ஒரு வழியாக சவுந்தர்யா கண்ணன் கல்யாணத்தை முடிவு செய்துடறாங்க. இதில் கோவமாக இருப்பது கிருஷ்ணவேணி அம்மாதான்.

தர்மதுரை ஐயா இறந்துவிட, அவரின் தம்பி மனைவி கிருஷ்ணவேணி அதிகாரம் வீட்டில் தூள் பறக்க ஆரம்பிக்குது. சவுந்தர்யா காதலிச்ச ஆகாஷை தனது மகள் வளர்மதிக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கறாங்க.

இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் ஆகாஷ் இருக்க, தங்கை வளர்மதி அக்கா சப்வுந்தர்யாவிடம், நீதான்க்கா இந்த கல்யாணத்துக்கு ஆகாஷை சம்மதிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசையா கேட்கிறாள்.

ஆகாஷ் சவுந்தர்யா

ஆகாஷ் சவுந்தர்யா

சவுந்தர்யா ஆகாஷை தனியாக சந்திச்சு, நாம் எல்லாம் படிச்சவங்க.நமக்கு எல்லா பக்குவமும் இருக்கணும் ஆகாஷ்.என் தங்கச்சி வளர்மதியை கல்யாணம் செய்துகிட்டா, என்னை பார்க்க நேரும்னுதானே நீ சங்கடப்படறே..இதிலென்ன சங்கோஜம் ஆகாஷ். நீயும் நானும் இதுவரைக்கும் நல்ல ஃபிரண்ட்ஸாத்தானே இருக்கோம். அப்படியே இருக்கலாம்..நீ வளர்மதியை கல்யாணம் செய்துக்கோ.அவளுக்கு உன்னை பிடிச்சு இருக்கு.உனக்கும் அவளை பிடிக்கலைன்னு சொல்ல முடியதுதானேன்னு சொல்றா.

சம்மதம் ஆகாஷ்

சம்மதம் ஆகாஷ்

ஆகாஷ் வளர்மதியை கல்யாணம் செய்துக்க சம்மதிக்க, இரு வீட்டார் சேர்ந்து நிச்சயதார்த்தம் செய்யறாங்க. அப்போது சவுந்தர்யாவின் அக்காக்கள் ரெண்டு பேரும் சவுந்தர்யா கண்ணன் மாமா கல்யாணத்தை சித்தப்பா அப்பவே பேசி முடிச்சார். அதை ஏன் கிடப்பில் போட்டு இருக்கீங்கன்னு கேட்க, எந்த நேரத்துல எதை பேசறீங்க? சவுந்தர்யா கல்யாணப் பேச்சை எடுத்தாலே எதாவது தடங்கல் வந்து சவுந்தர்யா கல்யாணம் நின்னு போகுது. இப்போ அதை ஏன் பேசறீங்கன்னு அத்தைங்க ரெண்டு பேரும் கேட்கறாங்க.

கண்ணன் வாக்கு

கண்ணன் வாக்கு

அவன்தான் ஒருத்திக்கு வாக்கு குடுத்து வச்சு இருக்கானே.. அப்புறம் எப்படி சவுந்தர்யாவை கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லுவான்னு மறுபடியும் ஒரு தங்கை பேச, அதெல்லாம் இப்போ இல்லை.இருங்க கண்ணன் பேசட்டும்னு சொல்றான் ஆகாஷ். இதுக்கு கிருஷ்ணவேணி அம்மா முகம் மாறிப் போகிறது. ஆகாஷ் அவங்க குடும்பவிஷயம் இதில் நீ எதுக்கு பேசறேன்னு ஆகாஷ் அம்மா சொல்றாங்க.

பேசட்டும் கண்ணன்

பேசட்டும் கண்ணன்

கண்ணன் பேசட்டும் அம்மா.. அவங்க கல்யாணம் முடிவானதுதானே..கண்ணன் என்னதான் சொல்றார்னு பார்ப்போமேன்னு ஆகாஷ் சொல்றான். கண்ணன் சவுந்தர்யவைப் பார்த்து சவுண்டு நீ சொல்றியான்னு கேட்கறான். என் விஷயத்தை நான் எப்போ மாமா முடிவு எடுத்து இருக்கேன். நீதானே எனக்கு நல்லது எதுன்னு முடிவு எடுப்பே..நீயே சொல்லுன்னு சொல்றா சவுந்தர்யா.

அப்போ நானே சொல்லிடறேன்னு சொன்ன கண்ணன் சபையினரைப்பார்த்து, சவுண்டை நான் கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்றான். இவங்க இருவர் முகத்தில் மட்டுமல்ல விஜயலட்சுமி அம்மா முகத்திலும் எத்தனை பூரிப்பு!

English summary
The Soundarya Kannan's marriage to one of Sun TV's kanmani serial serials has ended. Anger in this is Krishnaveni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X