Kanmani Serial: சவுந்தர்யாவுக்கும் கண்ணனுக்கும் கல்யாணம் கூடாதாமே?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் ஒரு வழியாக சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும் கல்யாணம். அதோடு, கிருஷ்ணவேணி, ராஜதுரையின் மகள் வளர்மதிக்கும், ஆகாஷுக்கும் கல்யாணம் என்றும் முடிவாகி விட்டது.
முதலில் கல்யாணம் நிச்சயமானது ஆகாஷுக்கும், வளர்மதிக்கும்தான். கண்ணன், சவுந்தர்யா கல்யாணம் நடக்க கூடாதுன்னு தர்மதுரையின் தங்கைகள் நினைக்க, ஆகாஷ் அதையும் நிறைவேத்தி வைக்கிறான்.
கண்ணன் வாயாலேயே நான் சவுண்டை கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்ல வச்சுடறான். இப்போது இரண்டு கல்யாணமும் ஒரே மேடையில் நடக்கும்படி ஏற்பாடுகள் .நடக்குது.
Aranmanai Kili Serial: இதுக்குத்தான் புருஷனோட முன்னாள் காதலி கதை கேட்க கூடாது!
ஆகாஷ் அம்மா கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி அம்மா ஆகாஷின் வீட்டுக்கு வர்றாங்க. அப்போது மாடியில் இருந்து இறங்கி வந்த ஆகாஷ் வெளியில் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பிட தனது சதித் திட்டத்தை தீட்டுகிறார் ஆகாஷின் அம்மா. சவுந்தர்யா என் கன்னத்தில் ஒரு தடவை அடிச்சுட்டா.அதனால், என் பையன் ஆகாஷுக்கு கல்யாணம் நடக்க இருக்கும் ஒரே மேடையில் சவுந்தர்யா கண்ணன் கல்யாணம் நடக்க கூடாது.
நிக்கணும் கல்யாணம்
சவுந்தர்யா, கண்ணன் கல்யாணத்தை அப்படி நடக்க விடாமல் செய்துட்டீங்கன்னா, உங்க பொண்ணு வளர்மதியையோ நான் மகாராணி மாதிரி பார்த்துக்குவேன்.இதுதான் நான் பெண் வீட்டாரை உங்ககிட்ட கேட்கும் வரதட்சனைன்னு கூட நீங்க நினைச்சுக்கோங்கன்னு ஆகாஷின் அம்மா, கிருஷ்ணவேணி அம்மாவிடம் சொல்றாங்க.
நல்லா வாழ
என் பொண்ணு வளர்மதி நல்லா வாழணும்னா..நான் கண்ணன் சவுந்தர்யா கல்யாணத்தை நிறுத்தி அவங்க கருமாதியை கூட நடத்த ஏற்பாடு செய்வேன்னு சொல்றாங்க. ஆனால், வளர்மதி ஆசைப்பட்ட ஆகாஷை அவளுக்கு கிடைக்க செய்தது சவுந்தர்யாதான். இதை புரிந்து கொள்ளாத அளவுக்கு முட்டாள் வில்லியாவா சவுந்தர்யா சித்தி இருப்பாங்க?
சவுந்தர்யா கண்ணன்
வியூவர்ஸ் பலபேருக்கு சவுண்டும், கண்ணனும்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசை இருந்தது. ஆனாலும் இவங்க செய்யற சதித் திட்டத்தால், முதலில் ஆகாஷ் வளர்மதி கல்யாணம்தான் நடக்கும் போல., கண்ணன் சவுந்தரியா கல்யாணத்தில் ஏதோ சிக்கல் நடந்து இன்னும் ஜவ்வு மாதிரி கதை இழுக்கும் போல!