Kanmani serial: சவுந்தர்யா கண்ணனுக்குள் காதல் பொங்கி வழியுதே!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல், கண்ணன் சவுந்தர்யா கல்யாணம் நடந்துவிடும் என்று நினைத்த நிலையில், இப்போது நடக்குமா, நடக்காதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
தர்மதுரையின் தம்பி ராஜ துரையின் மனைவி கிருஷ்ணவேணி அம்மா, கண்ணனுக்கும் சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் நடக்க கூடாது. இதற்கு செய்ய வேண்டிய வேலைகளில் கதிரேசன் தனக்கு துணையாக இருக்கணும்னு நீலி கோயிலில் சொம்பில் பால் சத்தியம் வாங்கிக்கறாங்க.
சவுந்தர்யா கண்ணன் நெருக்கம் அதிகமாகிட்டு போகுது. ஆனால், கல்யாணம் நடக்குமா, இல்லை ஏதாவது சதி செய்து கிருஷ்ணவேணி கல்யாணத்தை நிறுத்திருவாங்களோன்னு பயம் வருது.
முடியாத பெயரில்
வயல் வேலை செய்து கொண்டு இருக்கும் கண்ணனை, அக்கா பெண்ணை கல்யாணம் செய்துக்கறதை வச்சு பெண்கள் கேலி, கிண்டல் செய்யறாங்க. சின்னவரே கல்யாணம் நடக்கப் போகுது. இப்போ போயி வயலில் வேலை பார்த்துகிட்டு இருக்கீங்க. கல்யாணத்தப்போ பாலீஷா இருக்க வேணாமா.. ரெஸ்ட் எடுங்க சின்னவரேன்னு ஒருத்தர் சொல்ல, இன்னொரு பெண்மணி இந்த பியூட்டி பார்லர் போயி அழகாக்கிக்கலாம் இல்ல சின்னவரேன்னு கேட்கறாங்க.
இருக்கறது போதும்
சேச்சே...அதெல்லாம் வேணாம் பொன்னம்மாக்கா.. இருக்கறது போதும்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போது சின்னவருக்கு போன் வருது. சின்னவரே உங்க வரும் கால பொண்டாட்டிதான் போன்லேன்னு சொல்லுது ஒரு பாப்பா. ஒடி போயி போனை எடுத்து பேசறான். உடனே வா மாமான்னு சவுண்டு சொல்ல, சரி வரேன்னு சொல்றான்.
செல்லப் பெயர்
சின்னவரே உங்க பொண்டாட்டிக்கு செல்லமா என்ன பேர் வச்சு இருக்கீங்கன்னு சின்ன பெண் கேட்க, சவுன்ண்டுன்னு கூப்பிடுவேன்னு சொல்றான் கண்ணன். யாருமே உங்க பொண்டாட்டிக்கு நீங்க வைக்கிற செல்ல பேருல கூப்பிட முடியாத மாதிரி வைங்க சின்னவரேன்னு சொல்லுது..
கணவா பொண்டாட்டி
கணவா எல்லாமே கனவாவே போயிருமான்னு சொல்ல, நான் விட்ருவேனா அதுக்கு.. இப்போ பாருன்னு சவுந்தர்யா தோள் மீது கையை வைக்கிறான் கண்ணன். பாவம் ஆகாஷை கல்யாணம் செய்துக்க இருக்கும் வளர்மதிக்கு ஆகாஷுடன் காதல் வசனம் பேச முடியவில்லை என்கிற ஏக்கம்.
ஏக்கம் வளர்மதிக்கு
கணவா எல்லாமே கனவாவே போயிருமான்னு சொல்ல, நான் விட்ருவேனா அதுக்கு.. இப்போ பாருன்னு சவுந்தர்யா தோள் மீது கையை வைக்கிறான் கண்ணன். பாவம் ஆகாஷை கல்யாணம் செய்துக்க இருக்கும் வளர்மதிக்கு ஆகாஷுடன் காதல் வசனம் பேச முடியவில்லை என்கிற ஏக்கம்.