Kanmani Serial: சின்னவரு கண்ணனாகவே சஞ்சீவ் பேசறாரு பாருங்க...!
சென்னை: மக்கள் எப்படி எல்லாம் சீரியலை பார்த்து அதில் நடிப்பவர்களை உண்மையான கதாபாத்திரங்களாக ஏற்று நம்புகிறார்கள் என்று பார்க்க ஒரு உதாரணம்.
சன் டிவியின் கண்மணி சீரியலில் சின்னவர் கண்ணனாக நடிகர் சஞ்சீவ் நடிக்கிறார். இவரிடம் இவரை கண்ணனாக பாவித்து சில கேள்விகள் கேட்டு இருக்காங்க.
அதை சன் டிவி தனது முகநூல், டிவீட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.
மேடையில் பாடி அசத்திய மினிஸ்டர் ஜெயக்குமார்!
எப்படி உங்களுக்கு?
இந்த தீபாவளி எனக்கும் சவுண்டுக்கும் தலை தீபாவளி. குடும்பத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு இரண்டு பேரைத் தவிர மத்தவங்க எல்லாரும் தீபாவளியை சந்தோஷமாவே கொண்டாடறோம். நீங்களே பார்க்கத்தானே போறீங்க என்கிறார் கண்ணன்.
எப்படி போகிறது?
கல்யாண வாழக்கை எப்படி போகிறது என்கிற கேள்விக்கு.. ரொம்ப சந்தோஷமா போயிகிட்டு இருக்கு.சின்ன வயசில் இருந்தே எனக்கு சவுண்டுதான்னு முடிவு பண்ணியாச்சு.அந்த சவுண்டு எனக்கு பொண்டாட்டியா வந்தாச்சு.சந்தோஷம்தான்...
முத்துச்செல்வி எப்படி
முத்துச்செல்வி பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டபோது.. அந்த பொண்ணு என்னை நினைச்சு வாழ்ந்த பொண்ணு.அவ நல்லவன்னு தெரிஞ்சா கண்ணனுக்கு என்ன மாதிரி மன நிலை வரும்னு தெரியலை. இருந்தாலும் சவுண்டு ஒரு பக்கம் மனைவியாக வந்தாச்சு. பார்க்கலாம், கண்ணன் என்ன முடிவு எப்படி எடுக்கறான்னு என்று சொன்னார்,
சவுண்டு செல்லாகுட்டி
சவுண்டு பத்தி சொல்லனும்னா என் ஆசை பொண்டாட்டி அவளை .செல்லமா சொல்லணும்னா என் செல்லாகுட்டி என்று சொல்லலாம் என்று கூறினார். எல்லா தீபாவளியும் எனக்கு ஸ்பெஷல்தான். ஏன்னா நான் ஆசைப்பட்ட சவுண்டு எனக்கு பொண்டாட்டியா கிடைச்சு இருக்கான்னு சொன்னார்.