Kanmani Serial: வீட்டில் சரக்கை வச்சுக்கறது தப்பில்லையாமே!
சென்னை: ஒயின் ஷாப் உரிமையாளர் கடை நேரம் போக சரக்கை வீட்டில் வச்சுக்கறதும்...பார்ட்டி வைப்பர்வர்களுக்கு கொடுப்பதும் தப்பில்லைன்னு கண்மணி சீரியலில் சொல்றாங்க.
சன் டிவியின் கண்மணி சீரியலில் சின்னவர் கண்ணனின் வீட்டு மாப்பிள்ளை கதிரேசன் ஒயின் ஷாப் வச்சு நடத்தறான்.
கடை நேரம் போக வீட்டில் சரக்கை வச்சுக்கிட்டு விக்கறான். அதை போலீஸ் வச்சு விசாரிச்சால். பார்ட்டி வைக்க சரக்கு கேட்டாங்க. நேரமாயிருச்சு. வீட்டுக்கு வந்து வாங்கிக்க சொன்னேன்.இதுல என்ன தப்புன்னு கேட்கிறான்.
சட்டத்தில் இடமில்லை
போலீசிடம் கதிரேசன், ஃபிரண்ட் பார்ட்டி வைக்க சரக்கு கேட்டு இருந்தாங்க. அவங்க வந்து வாங்கிக்க லேட்டாயிருச்சு. அதான் வீட்டுக்கு வந்து வாங்கிக்கட்டும்னு எடுத்துட்டு வந்து வச்சிருந்தேன் சார்னு போலீஸ்கிட்டே சொல்றான் கதிரேசன். கண் முன்னாடியே நண்பர்கள் வந்து சரக்கை வாங்கிட்டு போறாங்க.
இதை விசாரிக்க
நண்பர்கள் பார்ட்டி குடுக்க கேட்டு இருந்தாங்கன்னு அவர் சொல்றார் சார். அதே மாதிரி நம்ம கண் முன்னாலேயே எல்லாரும் வந்து சரக்கை வாங்கிட்டு போயிட்டாங்க. இது தப்புன்னு சட்டத்தில் சொல்லலை சார். அதனால் நாங்க கிளம்பறோம்னு சொல்லிட்டு போலீஸ் கிளம்பறாங்க.
ஒரு உண்மை
இப்போ நமக்கு ஒரு உண்மை தெரியணும். ஒயின் ஷாப் வச்சிருக்கறவங்க வீட்டில் நடப்பது இதுதானா? மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுன்னு இதுனால்தான் சொல்றாங்களா? கடையைத் திறக்க நேரம் காலம்னு எதுக்கு வச்சு இருக்காங்க. அதுக்கு பேசாம வீட்டிலேயே ஒரு கடை ஓபன் பண்ணிடலாம். சீரியலில் தெரியாததை எல்லாம் தெரிய வச்சு இப்படி கெடுக்கறாங்களே..
மதுக்கடைகளை மூடும்படி
ஏற்கனவே மதுக்கடைகளை மூட சொல்லி போராட்டம் நடத்தி ஓய்ந்து போயி கிடக்காங்க நம்ம மக்கள்,. கதைக்கு உங்களுக்கு வேற கறபனையே கிடைக்கலையாங்க? அவன் சொல்றான்.. இப்போதுதான் நான் வீட்டுக்கு சரக்கை கொண்டு வந்து விற்க ஆரம்பிச்சு இருக்கேன். போக போக மொட்டை மாடியில் பார் ஆரம்பிக்க போறேன்னு..
ஐயோடா சாமி.. நிஜத்தை விட கற்பனை கதை ரொம்ப கொடுமையா இருக்கு!