kanmani serial: ஸ்ரீகாந்த் இவ்ளோ கெட்டவனா? அப்போ முத்துச்செல்வி கதி?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வி குடும்பம் ஸ்ரீகாந்த் என்று ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குடும்பத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் நல்ல அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார் .போலீஸ் வேடத்துக்கு பொருத்தமாகவும் இருக்கிறார்.
இப்படியே ரொம்ப ரொம்ப நல்லவராகவும் இருக்கிறாரே என்று ஆச்சரியப் படும்போதுதான் ஸ்ரீகாந்தை கெட்டவன் போல காமிக்கறாங்க. ரொம்ப ஷாக்!
ஸ்ரீகாந்த் முத்து
கெட்டவர்களிடம் சிக்கிய முத்துச்செல்வி குடும்பத்தை இஸ்பெக்டர் ஸ்ரீகாந்த்தான்
காப்பாத்தி போக்கிடமில்லை என்று தெரிஞ்சவுடன் தன் வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றான். வீட்டில் அம்மாவுடன் மட்டும் வசித்து வரும் ஸ்ரீகாந்தை இன்ஸ்பெக்டர் உடையில் முத்து குடும்பம் பார்த்து பயந்துடறாங்க. பயப்படாத...இதுதான் என்னோட வேலைன்னு சொல்றான் ஸ்ரீகாந்த்.
பொண்டாட்டி ஸ்ரீகாந்த்
இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் கல்யாணமானவர் என்று பிறகுதான் தெரிய வருகிறது. அவர் அம்மா என்று கூப்பிட்டவர் அவரது அம்மா இல்லை, அவரது மாமியார் என்றும் தெரிய வருகிறது. பொண்டாட்டி பிளம்பரோட ஓடிவிட்டாளாம்.இன்னொரு கல்யாணம் செய்துக்க சொன்னால் மாட்டேன் என்றும், அ வள் அவனிடம் ஏமாந்து திரும்பி வரும்போது நான் அவளுக்காக காத்திருப்பேன் என்றும் ஸ்ரீகாந்த் சொல்றான்.
என்னதான் உண்மை
பொண்டாட்டி ஓடிப் போயிட்டான்னு சொன்னவன், அவளையும், இன்னொருத்தனையும் கட்டி வச்சு துன்புறுத்தறான்.பார்ட்டி வச்சு கொண்டாடி லஞ்சம் வாங்கறான். பார்க்கவே பயமாயிருக்கும் மாதிரியான பல செயல்களை காமிக்கிறார்கள். அப்போ முத்துச்செல்வி குடும்பம் இன்னும் இவனிடம் மாட்டி கஷ்டத்தில் சிக்குவாங்களா?
கல்யாணம் ஆயிருச்சா
வீட்டில் இருக்கும் ஸ்ரீகாந்த்தின் மாமியார் இவ்ளோ நல்ல பெண்ணா இருக்கியேம்மா.. உனக்கு ஒரு கல்யாணத்தை செய்தால்தான் அப்பா அடுத்த பெண்ணை கரை சேர்க்க முடியும்னு சொல்ல, இல்லம்மா..எனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு தாலியை எடுத்து காமிக்கறா. அவள் வள்ளி வேஷத்திலிருந்த போது சின்னவரு கட்டின தாலி.