யாரு மனசுல யாரு... இதை கண்டு சொன்னவங்க யாரு..சொன்னதை கேட்டவங்க யாரு?...சாமியாடி...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் வளர்ச்சியடையாத கிராம மக்களின் வாழ்க்கை போல இப்போது கதை போகுது.
கொம்பன் படத்துல ராஜ்கிரண் கூட அருள் வந்து ஊரை சுத்தி வந்தார்.அவரிடம் யாரும் குறி கேட்கவும் இல்லை...ஒண்ணும் இல்லை.
அந்த ஊரை அவர் அப்படி சுத்தி வரணும்... அது ஒரு சம்பிரதாயம்... அவ்ளோதான். ஆனால், சன் டிவியின் கண்மணி சீரியல் கதை மக்களை கொஞ்சம் பின்னோக்கி அழைத்து செல்வதாக இருக்குது.
சாமியாடி சின்னவரு
சின்னவரு அதாவது கண்ணன் நாள் முழுவதும் விரதம் இருந்து மாலை வரை கண்ணன் உடலில் கருப்பண்ண சாமியை உருவேத்தறாங்க. இரவில் காடு, மேடு, மலை , ஊர் எல்லாம் சுத்தி வந்து கருப்பண்ண சாமி முன்னால நிக்கறார்.அப்போது யார் என்ன குறி கேட்கணுமோ கேட்டுக்கலாம். மனசுல நினைச்சதுக்கும் கருப்பண்ண சாமி சின்னவரு மூலமா பதில் சொல்லுவாராம்.
கண்ணனின் அக்கா
பாதியில வரும்போதே கண்ணனின் அக்கா விஜயலட்சுமி, கருப்பண்ண சாமி... என் மகள் சவுந்தர்யா மனசுல என் தம்பி கண்ணன்தான் இருக்கான். அவளுக்கும் கண்ணனுக்கும்தான் கல்யாணம் நடக்கணும்னு அருள் வாக்கு சொல்லு கருப்பண்ண சாமின்னு வேண்டிக்கறாங்க.
சுற்றி வந்த கண்ணன்
ஊரை சுற்றி வந்த கண்ணன் கருப்பண்ண சாமியா இப்போது அதே சாமி முன் நிக்கறான்.குறி கேட்கறவங்க கேட்டுக்கலாம்னு சொல்ல, சவுந்தர்யா...கருப்பண்ண சாமி என் மாமா அடி மனசுல நான்தான் இருப்பேன்னு எனக்கு தெரியும். ஆனா, இப்போ முத்துசெல்விக்கும், கண்ணன் மாமாவுக்கும்தான் கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கறா.
காதல் முத்துச்செல்வி
கருப்பண்ண சாமி நான் சின்னவரை உயிருக்கு உயிரா காதலிச்சேன்... அவரும் என்னை காதலிச்சாருன்னுதான் நினைச்சேன்..ஆனா, என் மேல பரிதாபப் பட்டுத்தான் அவர் என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சார்னு பேசிக்கறாங்க. அது உண்மையா இருக்க கூடாது சாமி. அவர் என்னை ஆசைப்பட்டு கல்யாணம் செய்துக்கணும்னு வெண்டிக்கறா.
கண்ணனுக்கும் முத்துசெல்விக்கும்
விஜயலட்சுமி அம்மா கண்ணனிடம் போயி, கருப்பண்ண சாமி நான் கேட்கறது எல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்... கண்ணனுக்கு முத்துசெல்வியை கல்யாணம் பண்ணி வைக்கணுமான்னு கேட்கறாங்க.
பாதியில ஒருத்தி
யாரு மனசுல யாரு..அதை கண்டவங்க யாரு..கண்டு சொன்னவங்க யாரு...கண்ணன் மனசுல ஆதியிலே ஒருத்தி, பாதியில ஒருத்தி வந்தாங்க. இப்போ பாதியில வந்த முத்துசெல்வியை கண்ணனுக்கு கட்டி வை... அவதான் கண்ணனுக்குன்னு சொல்லிட்டு அவன் படுத்துவிட... சாமி மலை ஏறிடுது.
நாளைக்கு இல்ல கண்ணனுக்கு இருக்கு விஜயலட்சுமி அம்மாகிட்ட....