Kanmani serial: அக்கா ரொமான்ஸ் பண்றது தங்கச்சிக்கு முடியலை...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யா காதலிச்ச ஆகாஷை, அவளின் சித்தி கிருஷ்ணவேணி அம்மாவின் பெண் வளர்மதி காதலிக்கிறாள். இந்த காதலுக்கு ஆகாஷ் சம்மதம் சொல்லவில்லை.
என்றாலும், வளர்மதி அம்மாவை விட்டு,ஆகாஷை திருமணம் பேசி முடிக்க ஆகாஷ் அம்மாவிடம் திருமணம் பேசி முடிக்க கேட்டுக்கறா. கிருஷ்ணவேணி அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். சவுந்தர்யா வீட்டுக்கு நல்லது நடக்க கூடாது என்று எண்ணத்தில் இருப்பவர் கிருஷ்ணவேணி அம்மா.
மகள் மட்டும் எப்படி இருப்பாள்...ஆகாஷ் விஷயத்தில் அவனை அடைந்தே தீர வேண்டும் என்று விருப்பத்தில் இருக்கா. எந்த பொண்ணை வேணும்னாலும் கட்டிக்கறேன்.ஆனால்,சவுந்தர்யா வீட்டில் இன்னொரு பெண் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கான் ஆகாஷ்.
ஆகாஷ் சவுந்தர்யா
ஆகாஷ்...நானும் நீயும் நண்பர்களாக கூட கொஞ்ச காலம் இருந்துட்டோம். இனி அப்படியே இருந்துட்டு போலாமே.இதுக்கும், என் தங்கச்சி வளர்மதி உன்னை கல்யாணம்பண்ணிக்கறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. எனக்கு தர்மசங்கடமா எல்லாம் இருக்காது. நாம படிச்சவங்க,உண்மை யதார்த்தம் புரிஞ்சுகிட்டு நடந்துக்குவோம் ஆகாஷ். வளர்மதியை கல்யாணம் செய்துக்கோன்னு சொல்றா.
வளர்மதி ஆகாஷ்
சவுந்தர்யா சொன்ன உடனே ஆகாஷ் சரி வளர்மதியை கல்யாணம் செய்துக்கறேன்னு அம்மாகிட்ட சொல்றான்.கல்யாண ஏற்பாடுகள் நடக்குது.இவங்களோட சேர்ந்து சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும்கூட கல்யாணம் நடத்த ஏற்பாடுகள் நடக்குது. ஆனால் ,ஆகாஷின் அம்மா சவுந்தர்யாவுக்கும், கண்ணணுக்கும் கல்யாணம் நடக்கக் கூடாது .அதுதான் வளர்மதியை ஆகாஷுக்கு கல்யாணம் செய்து வைக்க நான் கேட்கும் வரதட்சனைன்னு கிருஷ்ணவேணி கிட்டே சொல்றாங்க.
காலில் சலங்கை
கிருஷ்ணவேணி அம்மாவுக்கு ஏற்கனவே சவுந்தர்யா கண்ணன் கல்யாணம் நடக்கறது கூடாதுன்னு நினைக்கறவங்க. சும்மாவே ஆடறவங்க இவங்ககளுக்கு சலங்கையை வேற கட்டிவிட்டாங்க ஆகாஷ் அம்மா.நாத்தனார் மகன் கதிரேசனுடன் சேர்ந்து சவுந்தர்யா கண்ணன் கல்யாணத்தை நிறுத்த நீலி கோயிலுக்கு போயி அவனிடம் சத்தியம் வாங்கிக்கறாங்க.
கண்ணன் அருகில் வர,மாமா என்னபண்ண போறே... இரு சவுண்டு சொல்லாம செய்யறதுலதான் கிக்குன்னு சொல்லி நெருங்கி வர்றான்.அவள் தோளில் கை வச்சு,முகத்தை வருடி.. இன்னும் அவள் கிட்டத்தில் கண்ணன் நெருங்க...
கண்ணனும் சவுந்தர்யாவும்
சவுந்தர்யாவும், கண்ணனும் ஒருவரை ஒருவர் எக்கச்சக்கமாக காதலிப்பது என்பதை இந்த இரவு ரொமான்ஸ் காட்சியில்,இருவரும் கணவா ஐ லவ் யுடான்னும், ஐ லவ் யூ பொண்டாட்டி என்று கண்ணனும் சொல்லி நெருக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
கண்ணன் அருகில் வர,மாமா என்னபண்ண போறே... இரு சவுண்டு சொல்லாம செய்யறதுலதான் கிக்குன்னு சொல்லி நெருங்கி வர்றான்.அவள் தோளில் கை வச்சு,முகத்தை வருடி.. இன்னும் அவள் கிட்டத்தில் கண்ணன் நெருங்க...
அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சவுந்தர்யாவின் தங்கச்சி வளர்மதி வேணும்னே அக்கான்னு கூப்பிட்டு கலைச்சுடறா. இவளுக்கு ஆகாஷ் தன்னுடன் இப்படி காதல் ரசம் பிழியவில்லை என்கிற கடுப்பு.