kanmani Serial: ஹனிமூன் போனோமா என்ஜாய் பண்னோமான்னு இல்லாம...?
சென்னை: எப்போதுமே சீரியல்களில் பொண்ணு மாப்பிள்ளை ஹனிமூன் கிளம்புவாங்க. அப்போதுதான் அதில் வஞ்சகர்கள் டிவிஸ்ட் வைச்சு வேடிக்கை பார்ப்பார்கள்.
இப்படியே காலம் காலமாக பார்த்து போரடிச்சுப் போச்சு. அப்படிப்பட்ட டிவிஸ்ட் இல்லேன்னா எதுக்காக இப்போ அதை வைக்காம விட்டாங்கன்னு மக்கள் யோசிக்கற அளவுக்கு கூட இந்த விஷயம் மக்கள் மனசில் பதிஞ்சு இருக்கு.
சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணனும் சவுந்தர்யாவும், வளர்மதியும் ஆகாஷும் கொடைக்கானல் ஹனிமூன் போறாங்க.
விடாது துரத்தல்
கண்ணனை போட்டுத் தள்ள கண்ணனின் மச்சான் கொடைக்கானலுக்கு ஆள் அனுப்பறான்.அங்கே கண்ணனும், சவுந்தர்யாவும் படாத பாடு பட்டு ரௌடிகளிடமிருந்து தப்பித்து ரூமுக்கு வராங்க. வளர்மதி ஆகாஷை நிம்மதியாக தூங்க கூட விடாமல் சைக்கோ மாதிரி பிஹேவ் பண்றா.
Sembaruthi Serial: கண்ணாடி வளையல் ஆதி தொட்டதும் நழுவிக்கொண்டு போகிறதே...!
டிரிப் கேன்சல்
ஹனிமூன் டிரிப்பை கேன்சல் பண்ணிட்டு ஊருக்குத் திரும்பி வந்துடறாங்க. இப்படி காட்சிகளை வைத்தால் எப்படிங்க? ஏற்கனவே ஹனிமூன் போறதுன்னா அதுவும் கொடைக்கானல், ஊட்டி போறதுன்னா புதுமண தம்பதிக்குள்ள பயம் இருக்கு.அவ்வளவு ஏன் ஒருத்தர் ஒருத்தர் மேல சந்தேகப்பட கூட வாய்ப்பு இருக்கு.
எல்லா நேரத்திலும்
எப்போதாவது உண்மையில் நடக்கும் அசம்பாவிதத்தை மனதில் வைத்து . எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் அந்த அசம்பாவிதங்கள் அவர்களைத் துரத்துவது போல காட்சிகளை இனி அமைக்காதீர்கள். பார்ப்பவர்களும் மனிதர்கள்தானே..! கொஞ்ச நேரம் அவர்கள் நிம்மதியாக சீரியல் பார்க்கற மாதிரி காட்சிகள் அமையுங்கள்.
கண்ணன் சவுந்தர்யா
ரவுடிகளிடம் இருந்து தப்பித்த சவுந்தர்யா ஒரு பாறையை பிடிச்சுகிட்டு தொங்கறா. கண்ணன் அதாவது சஞ்சீவ் அந்த இடத்தில் பொண்டாட்டியைக் காப்பாத்த கதறி அழுதுகிட்டு சூப்பரா நடிச்சுக்கிட்டு வர்றார். அந்த லொகேஷன் மட்டும் ரொம்பமொக்கையா இருக்குதுங்க.அப்படி காமிச்சும் இருக்காங்க. கண்ணன் அந்தப் பக்கமா போனா..தொங்கும் சவுந்தர்யாவைத் தூக்கிகிட்டே வந்துடலாம். அதை அப்பட்டமா சின்ன பிள்ளைக்கு கூட தெரியற மாதிரி ஷூட் செய்து இருக்காங்க.