கொம்பன் படத்தின் பார்ட் 2 கண்மணியில் பார்த்தாச்சுங்கோ... நீங்களும் பாருங்க!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சின்னவரு கண்ணன் ஒரு நாள் முழுக்க விரதம் இருந்து கருப்பண்ண சாமியின் உருவை ஏத்தி, ராத்திரி சாமியாட காடு மேடு வலம் வருகிறான்.
திரு அண்ணாமலை கிரிவல பாதை மாதிரி இருக்கும் காட்டு பாதையில் தனியாக வீர ஆவேசத்துடன் ஓடி வர்றான்.
சின்னவரை கொலை செய்ய முத்துசெல்வியின் முறை மாமன் மாயன் துரத்தி ஓட...மாயனை காப்பாத்த தனித் தனியா போன சவுந்தர்யாவும், முத்துசெல்வியும் மாயனின் ஆட்கள் மற்றும் மாயனிடம் அடிவாங்கி மயங்கி விழுந்துடறாங்க.
நீங்க கர்ப்பமா இருக்கீங்களா.... திரு ஆனந்தியிடம் கேட்கிறான்...பாவம் அவ என்ன சொல்லுவா?
கவலைப்படாத கண்ணன் தன் வழியில்
இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத கண்ணன் தன் வழியில் வீராவேசத்துடன் ஓடிக்கொண்டு இருக்கான். ஓடி சென்று கோயிலை அடைந்த பின்னர்தான் அவன் சாமியாடுவான்அப்போது அவனிடம் குறி கேட்கலாம்.குறி கேட்க சவுந்தர்யாவை காதலிச்ச ஆகாஷும் வந்திருக்கான்.
நெஞ்சில் மாமா கண்ணன்
ஆகாஷ் மாமா உன்னை குறிகேட்க வர சொன்னாலும் நீ வரக்கூடாதுன்னு சவுந்தர்யா சொல்றா. இல்லை நான் வருவேன்..உன் மாமாதான் வர சொன்னார் என்றும் சொல்றான். வராத ஆகாஷ் உனக்கு புரியாதுன்னு சொல்லிட்டு சுடிதாரை சற்றே விலக்கி நெஞ்சை காமிக்கறா.அங்கே கண்ணன் என்று தனது மாமாவின் பெயரை பச்சைக் குத்தி வச்சிருக்கா.
சவுந்தர்யா அதிர்ந்த ஆகாஷ்
சவுந்தர்யாவின் நெஞ்சில் கண்ணன் என்று பச்சைக் குத்தி இருந்ததைப் பார்த்தும் இன்று சவுந்தர்யாவை நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கண்ணனிடம் குறி கேட்க வந்திருக்கான் கண்ணன். சவுந்தர்யா எவ்வளவோ சொல்லியும் ஆகாஷ் கேட்கலை..குறிகேட்டுட்டுத்தான் போவேன்னு அடம் பிடிக்கறான்.
சவுந்தர்யா குடும்பம்
சவுந்தர்யா குடும்பமே கண்ணணுக்குக்காக காத்திருக்க, காட்டு மேட்டு வழியில் ஒரு பக்கம் முத்துச்செல்வியின் அப்பா,முத்துச்செல்வி, சவுந்தர்யா அடிபட்டு வீழ்ந்து கிடக்கறாங்க.என்ன ஆகுமோ தெரியலை.
ஆனா,நடிகர் ராஜ்கிரணுக்கு பிறகு சாமியாட நடிகர் சஞ்சீவ் பெஸ்ட் சாய்ஸ்...!