பாவாடையை சுத்தி விட்டு.. கலங்கடித்த ரோஷினி.. கிறுகிறுத்துப் போன ரசிகர்கள்
சென்னை: பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு இப்போ டைம் சூப்பரா இருக்குங்க. அவர் காட்டுல அடை மழைதான்
ஒரே ஒரு சீன்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டு போனது. அதாங்க நடையாய் நடந்தாரே.. அதுதான் ரோஷினிக்கு பிரேக் பாயின்ட்டே.
அவர் பாட்டுக்கு கோபத்துடன், பாரதியார் பாடல் பின்னாடி ஒழிக்க நடந்து போனதை வைத்தே ரோஷினியை டாப்புக்குக் கொண்டு போய் விட்டனர்.
மொட்டை மாடியில்.. மட்ட மல்லாக்க... சிலிர்க்க வைத்த லிசா
கலக்கும் கண்ணம்மா
வழக்கமான வில்லத்தனம் கலந்த சீரியல்தான் பாரதி கண்ணம்மா .ஆரம்பத்தில் நல்லாத்தான் போச்சு .திடீரென இந்த டிஆர்பி மோகம் பிடித்துக் கொள்ள கண்ணம்மாவை வைத்து கேம் ஆடி விட்டனர் .எதிர்பார்த்தது போலவே அவரை வைத்து நாடகம் பிக்கப் ஆகி இப்போது கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது பாப்புலாரிட்டி . இந்த சீரியலுக்கு இப்போது ஏகப்பட்ட ரசிகர்கள்
கலருடன் கலக்கல்
வந்த ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள கண்ணம்மாவை வைத்தே பல காட்சிகளை வைத்து கலக்கி்க கொண்டிருக்கிறார் டைரக்டர் .ரோஷினிக்கும் இந்த சீரியல் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது . இந்த சீரியலில்ஆரம்பத்தில் கூட அவரை யாரும் சரியாக கவனிக்கவில்லை .கலரை மட்டுமே வைத்து கொண்டு போய்க் கொண்டிருந்தனர்.
நடந்தாரே நடையாய்
ஆனால் அவர் புயலாக மாறியது முதல்தான் சீரியலில் ரோஷினிக்கும் முக்கியத்துவம் கூடியது .என்னோட மறுபக்கத்தைப் பாருங்கடா என்று அவர் அவிழ்த்துக் காட்டினார் தனது திறமையை.. பிறகென்ன மொத்தமாக அவர் பக்கம் வந்து விழுந்து விட்டார்கள் ரசிகர்கள் .எங்க கண்ணம்மாவை அமெரிக்காவரைக்கும் நடக்க விட்டுட்டீங்களேடா என்று கழுவியும் ஊற்றினர் சந்தடி சாக்கில்.
அடடா டான்ஸ்
இப்போது ஒரு போஸ்ட் போட்டுள்ளார் ரோஷினி .பெரிய பாவாடை போன்ற டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு சுத்தி விட்டு ஆடுகிறார் .புயல் போல என்றும் கேப்ஷன் வேற போட்டுள்ளார்.பிறகென்ன ரசிகர்கள் வந்து விழுந்து வண்ணம் உள்ளனர் . சும்மா சொல்லக் கூடாது.. கருப்பாக இருந்தாலும் ரோஷினியின் அழகுக்கு ஈடு இணையே கிடையாதுங்க .இப்படித்தான் ரசிகர்களும் அவரை வாழ்த்துகிறார்கள்.
சேலையில் தனி கவர்ச்சி
இன்னோரு போஸ்ட்டில் சேலையில் கலக்கியுள்ளார் ரோஷினி .செம்மையாக இருக்கிறார் இந்த போட்டோஸில், அசரடிக்கும் அழகுன்னு சொல்வாங்களே அது இதுதாங்க என்று ரசிகர்கள் விழுந்து விழுந்து சொக்கிக் கிடக்கிறார்கள் .புது வருடத்தை பாசிட்டிவிட்டியோடும் பொறுமையோடும், உள் மனசு அமைதியோடும்வரவேற்போம் என்று அவர் அதற்கு கேப்ஷனும் போட்டுள்ளார். இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.