Barathi Kannamma Serial: கண்ணம்மாவுக்கு கோவம் வந்துருச்சு...கண்களை உருட்டறா!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் மாமியார் சவுந்தர்யா அம்மா என்ன சொன்னாலும் பொறுத்துப் போகும் கண்ணம்மாவுக்கு இப்போ கோவம் வருது பாருங்க. மாடிப்படியில் வேக வேகமா ஏறிப்போயி பாரதிகூட தான் இருக்கும் போட்டோவை எடுத்துட்டு வந்து மாமியார் உட்காரும் இடத்தில் வைக்கிறாள்.
சித்தி திட்டினாலும் கோவம் வராது, அஞ்சலி திட்டினாலும் கோவம் வராது. பாட்டி திட்டினாலும் கோவம் வராது. இப்போ கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் என்னதான் கண்ணம்மாவை கருப்பு என்று ஒதுக்கி வைத்தாலும் திட்டினாலும் கோவமே வராது.
இந்த பொண்ணோட கோபத்தையும் வெளிக்கொண்டு வர ஒரு சீன் வச்சு இருக்காங்க, பாரதி கண்ணம்மா சீரியலில். அப்படி என்னவாக இருக்கும்.. அப்படி கோவம் வரும்படி என்னதான் நடந்து இருக்கும்?
தத்து பிள்ளை
பாரதியும் கண்ணம்மாவும் வெண்பாவின் சூழ்ச்சி வலையில் அப்பட்டமா விழுந்து கிடக்கறாங்க. அதனால், தான் சொல்வதைத்தான் அவர்கள் நம்ப வேண்டும் என்பது போல வெண்பா இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கிறாள்,. பாரதிக்கு குழந்தை பிறக்காதுன்னு பொய் சான்றிதழ் குடுக்கறா. கண்ணம்மாவுக்கு இதை மீறி குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று டெஸ்ட் என்று சொல்லி அவளுக்கு குழந்தை பிறக்காமல் இருக்க மாத்திரை குடுத்துடறா.
தத்து பிள்ளை
பாரதியும் கண்ணம்மாவும் வெண்பாவின் சூழ்ச்சி வலையில் அப்பட்டமா விழுந்து கிடக்கறாங்க. அதனால், தான் சொல்வதைத்தான் அவர்கள் நம்ப வேண்டும் என்பது போல வெண்பா இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கிறாள்,. பாரதிக்கு குழந்தை பிறக்காதுன்னு பொய் சான்றிதழ் குடுக்கறா. கண்ணம்மாவுக்கு இதை மீறி குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று டெஸ்ட் என்று சொல்லி அவளுக்கு குழந்தை பிறக்காமல் இருக்க மாத்திரை குடுத்துடறா.
டாக்டர் புருஷன்
வீட்டில் இருக்கும் டாக்டர் புருஷன்.. கண்ணம்மாவுக்கு வெண்பா என்ன மாத்திரை குடுத்து இருக்கான்னு கூட டெஸ்ட் பண்ண மாட்டானாம். குழந்தை பிறக்காது என்கிற விரக்தியில் இருவரும் இருந்துக்கொண்டு, ஆஸ்ரமத்தில் பிள்ளையைத் தத்து எடுக்க போறாங்க. அதையும் இந்த வெண்பா வந்து கெடுத்துவிடுகிறாள். சவுந்தர்யா அம்மா அந்த குழந்தையை வேண்டும் என்றே வேறு ஒருவருக்கு தத்து குடுக்க ஏற்பாடு செய்யறாங்க. அவங்க குழந்தையை தூக்கிகிட்டும் போயிடறாங்க.
டாக்டர் ஜோதிடம்
வேற டாக்டர்கிட்டே செகண்ட் ஒப்பீனியன் கேட்கலை. ஜோதிடம் கூட பார்க்கலை. சவுந்தர்யா அம்மா பாரதிக்கு இன்னொரு கல்யாணம் செய்து வச்சுடணும்னு முடிவுக்கு வந்துடறாங்க. வெண்பா பாரதியை தான் கல்யாணம் செய்துக்கணும்னு இந்த வேலையை எல்லாம் பார்க்கிறாள். ஆனால், சவுந்தர்யா அம்மா பல பெண்களின் போட்டோக்களை டீப்பாயில் பரத்தி வைத்து பாரதிக்கு பொருத்தம் பார்க்கறாங்க.
கண்ணம்மாவுக்கு கோவம்
சவுந்தர்யா அம்மா போன் பேச சென்றுவிட டீப்பாயை பார்த்த கண்ணம்மாவுக்கு வருது பாருங்க கோவம். கண்களை உருட்டிக்கொண்டு போட்டோக்களை பார்த்தவள், வேக வேகமாக மாடிப்படியில் ஏறி ஓடுகிறாள்,. அங்கு தங்களது அறையில் மாட்டி இருந்த தானும் பாரதியும் சேர்ந்து நிற்பது போன்ற போட்டோவை எடுத்து வந்து, டீப்பாயில் இருந்த அனைத்து போட்டோக்களையும் தள்ளிவிட்டு அந்த போட்டோவை வைக்கிறாள்.
இப்படி கோவம் வர வேண்டிய விஷயத்துக்கு கோவம் வரணும்ங்க.. அப்போதுதான் அ