பாரதி கண்ணம்மா.. நீயடி பொன்னம்மா... கருப்பு எனக்கு பிடிக்கும்மா!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கருப்பு கண்ணம்மாவை யாருக்கும் பிடிக்கவில்லை. சித்தி கொடுமையால் சொந்த வீட்டிலே வேலைக்காரியாக வாழ வேண்டிய கொடுமை.
ரெண்டாம் தாரம் சித்திக்கு பிறந்த அஞ்சலி செம அழகு. வெள்ளை நிறம்.. இந்த அழகுதான் பாரதியின் தம்பி அகிலனுக்கும், அவனின் அம்மா சவுந்தர்யாவுக்கும் ரொம்ப பிடிச்சு போகுது.
உடனே, அஞ்சலிக்கு அருமையான பங்களா ஒன்றை பரிசா தர்றாங்க. ஆனால், அஞ்சலிக்கு அகிலனின் அண்ணன் டாக்டர் பார்தி மேல்தான் பார்வை விழுந்து, காதலாகிறது.
பாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து #NotreDame
தாம்பூலம் மாத்தல்
நிச்சயதார்த்த தாம்பூலம் மாத்தும் வைபோகத்தை சீக்கிரம் நடத்த திட்டமிட்டு, அப்போது கண்ணம்மா இங்கே இருக்க கூடாது. ஒரு வேலைக்காரிக்கு இவ்ளோ மரியாதை எதுக்கு. அதுவும் இவளை பார்க்கவே எனக்கு பிடிக்கலைன்னு சவுந்தர்யாம்மா கல்யாணத்தை நிறுத்தற லெவலுக்கு போறாங்க.
பாரதி
அப்போதுதான் வேணும்னே பாரதி கண்ணாம்ம்மாவின் அப்பாவைத் தூண்டிவிட்டு, கண்ணம்மா வேலைக்காரி இல்லேன்னா, அப்போ யாருங்கன்னு கேட்கறான். உடனே கண்ணாம்மாவின் அப்பா அவ என்னோட முதல் தாரத்து பொண்ணுங்கன்னு கதறி அழறார்.
எல்லாருக்கும்
கண்ணம்மாவுக்கு ரொம்ப சந்தோசம்.. எல்லார் முன்னாலயும் அப்பா என்னை தன் பொண்ணுன்னு சொல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சதே போதும். நான் அந்த கதவுகிட்ட நின்னு ஓரமா அஞ்சலி நிச்சயதார்த்தத்தை பார்த்துட்டு போறேன்னு சொல்லி அழுதுகிட்டே போறா. அங்க பாரதி மட்டுமே கண்ணம்மாவுக்காக கலங்கினான்.
கண்ணம்மா
கோயிலில் கண்ணம்மா சாமிகிட்ட என்னை சந்தோஷப் படுத்திட்டே ..அதனால இனிமே உன் பேரு பாரதின்னு சொல்லிட்டு சிரிக்கறா. பாரதி சாமி பாரதி சாமின்னு சொல்லிக்கிட்டு இருக்கா. அப்போதுதான் கோயிலுக்கு வந்திருந்த பாரதி.. என்னங்க.. அது கணேசன்.. பாரதின்னு சொல்றீங்கன்னு சொல்லிட்டு சிரிக்கறான்.
இந்த சாமி
தினமும் இந்த சாமிகிட்டத்தான் வேண்டுவேன். அஞ்சலி நிச்சயதார்த்தத்துல உங்கம்மாவுக்கு புரியற மாதிரி, என்னை தன் மகள்னு அப்பா சொல்ல நீங்கதானே காரணம். அது போதும்ங்க எனக்கு. அதை இந்த சாமிதான் உங்க மூலமா செஞ்சுது. அதுக்குத்தான் பாரதின்னு சாமிக்கு பேர் வச்சேன்னு சொல்லிட்டு சிரிக்கறா.
இந்த பாரதி
அந்த சாமி மாதிரி இனி எப்பவும் உங்க்க கூட நான் இருப்பேன். ஏதாவது கஷ்டம்னா இந்த பாரதிகிட்ட சொல்லுங்க..உங்க கஷ்டத்தை தீர்த்து வைப்பேன்னு சொல்றான்னு பாரதி.அவன் கையில் பூவை கொடுத்து, இது சாமி பாதத்துல வச்சு எடுத்த பூ. உங்க ஆஸ்பத்திரியில வைங்க. நல்ல பேரும், புகழும் உங்க ஆஸ்பத்திரிக்கு கிடைக்கும்னு சொல்றா. கோயில் மணி அடிக்குது.. இருவரும் சிரிப்புடன் பார்த்துக்கறாங்க.