kanmani Serial: சவுந்தர்யாவும் கண்ணனும் ரொமான்ஸுங்கோ....!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் படிக்காத வெள்ளந்தி கண்ணன் அதான் சின்னவரு இப்படியும் ரொமான்ஸ் பண்ணுவாரான்னு கேட்கற அளவுக்கு ரொமான்ஸ் இருக்குதுங்க.
இதுவரை கண்ணனுக்கும் சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த சீரியல் ஆர்வலர்கள் இப்போது,சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
போதா குறைக்கு சினிமா பாட்டு ஒலிக்கவிட்டு, இவங்களும் ரொமான்ஸ் பண்றாங்க. பார்க்க நல்லாத்தான் இருக்கு.ஏன்னா இவங்க ரெண்டு பேரும் சேருவாங்களான்னு தவிச்சவங்க ரசிகர்கள்.
சவுந்தர்யா சந்தோஷத்தில்
சவுந்தர்யா கண்ணன் மாமன் தன்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்ன அந்த நிமிஷம் சவுந்தர்யா வாழ்க்கையில் நொடிக்கு நொடி சந்தோசம்.. அந்த சந்தோஷம் பூரிப்பாய் நொடிக்கு நொடி மாறுகிறது சவுந்தர்யாவின் முகத்தில்..மாமாவைப்பார்த்து வெட்கப்படுகிறாள்.
Tamil Selvi Serial: படிக்காதவங்க வீட்டில் படிக்க வச்சுட்டாங்க... படிச்சவங்க வீட்டில்?
கிட்டே வர மாமா
இப்போ எதுக்கு கிட்டே வர்ற மாமான்னு சவுந்தர்யா சுரத்தின்றி பேச, செய்யறதுக்கு முன்னால சொல்லிட்ட கிக்கு இருக்காது சவுன்டுன்னு கண்ணன் சொல்ல, அவன் அவளை நெருங்கி வந்து, மெதுவாக தோளில் கை வச்சு தன் பக்கம் இழுத்து, முகத்தை பார்க்க அவள் மாமா மாமா என்று ரொம்ப ஆசையாகவும், கிரககமாகவும் கூப்பிடறா.
வளர்மதி பொறுத்துகாம
கண்ணன் சவுந்தர்யாவின் ரொமான்ஸை பார்த்துட்டா,சவுந்தர்யாவின் சித்தப்பா பெண் வளர்மதி தனக்கு பிடிச ஆகாஷிடம் ரொமான்ஸா பேச ஆகாஷை போனில் கூப்பிடறா ,அவன் தனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு வச்சுடறான்.
பொண்டாட்டி கணவா
கல்யாணம் செய்துக்க கொள்ள சம்மதிச்சுட்ட சவுந்தர்யா கண்ணனை கணவான்னு கூப்பி
டறா. கண்ணன் பதிலுக்கு பொண்டாட்டின்னு கூப்பிப்பட்டு இன்னும் ரொமான்ஸ் தொடந்து கொண்டு இருக்க,இதை பொறுத்துக்க முடியாத வளர்மதி இருவரின் ரொமான்ஸையும் கலைச்சுடறா
ரொம்ப கஷ்டமா போச்சுங்க.