அடடா... தம்பதியர் ஊடல் இப்படி எமோஷனில் முடிஞ்சி போச்சே!
சென்னை: நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகிட்ட நீங்கள் இதை மாத்திக்கணும்னா எதை மாத்திக்க சொல்லுவீங்க என்று கரு பழனியப்பன் தம்பதியரை பார்த்து கேட்டார்.
ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியின் முன்னோட்டத்தை அதன் ட்விட்டர் வலைத் தளத்தில் ஜீ தமிழ் டிவி பதிவிட்டுள்ளது.
அதில் நிச்சயிக்கப்பட்ட தம்பதியர் இதை மாற்றிக்கொள்ள சொல்லி திருமணம் ஆனது முதல் இன்றுவரை சொல்லியும் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் எதை சொல்லுவீர்கள் என்று கேட்டபோது ஆளாளுக்கு ஒன்றை சொன்னார்கள்.
என்னால் முடியாது
எங்கே போனாலும் வேகமாக சாப்பிடுவார் சார். என்னால் அப்படி சாப்பிட முடியாது. எத்தனை தடவை சொல்லிப் பார்த்துவிட்டேன் சார், என்னால் அப்படி சாப்பிட முடியாது. கடைசியில் நான் பாதியில் எழுந்திரிக்க வேண்டியதாகிவிடும் என்று சொன்னார். இதை கேட்ட கணவர் சிரித்தார்.
கட்டிலில் அப்படியே
குளிச்சுட்டு ஈரத்துண்டை அப்படியே போட்டுட்டு போயிடுவார் சார். கல்யாணம் ஆன முதல் இன்னி வரைக்கும் சொல்லி பார்த்துட்டேன். இன்றுவரை திருந்தியபாடில்லை சார் என்று ஒரு பெண் கூறினார். இன்னொரு பெண் கூறுகையில், சாப்பிடும்போது தட்டை துடைத்த மாதிரி ஒன்று கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார் சார்.
வைக்கணும் சார்
ஏதாவது மிச்சம் வைக்கணும் சார். பார்க்கறவங்க எல்லாரும் சொல்வாங்க. பையன் மிச்சம் வைக்காம சாப்பிடறான், பொண்ணு எப்படி சாப்பிடுது பாருன்னு. எனக்கு குடல் குழம்பு இதல்லாம் பிடிக்காது. அதனால், இவரும் எதாவது மிச்சம் வைக்கணும். அட்லீஸ்ட் பூண்டு தக்காளி இதையாவது மிச்சம் வைக்கலாமே.. தட்டை துடைச்ச மாதிரி சாப்பிட்டு வச்சு இருப்பார்னு சொன்னார் அந்த பெண்.
சந்தோஷமா இல்லை
கடைசியாக நடந்த சண்டையில் ரெண்டு மாசமா சந்தோஷமா இல்லைன்னு சொல்லிட்டேன்னு சொன்ன அந்த பெண் தன் கணவரிடம் அழுது கொண்டே எமோஷனாகி சாரி, நான் சந்தோஷமாகத்தான் இருந்தேன்னு சொன்னார். கடைசியில் எமோஷனில் முடிந்தது இந்த உரையாடல் நிகழ்வு.