என்னாது ராஜா ராணில காதலுக்கு மரியாதையா!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில், வினோதினிக்கும் ஹரீஷுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.
விநோதினியும், ஹரீஷு ம் லவ் பண்ணியது எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் தரக்குறைவாக பேசிட்டாங்கன்னு,வினோதினியை வேணாம்னு சொல்லிடறாங்க.
திருட்டுத் தனமா கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவெடுத்தப்போ, வினோதினி மனசு மாறி திரும்பி வந்துடறா.
அடுத்து கார்த்திக் பார்த்து வச்சிருக்க மாப்பிள்ளைக்கு கல்யாண ஏற்பாடுகள் பண்றாங்க. கல்யாணம் நடக்கும் கோயிலுக்கு ஹரீஷும், அவனோட அப்பா அம்மாவும் வந்துடறாங்க.
நாங்க சண்டைக்கு வரல.. கல்யாணத்துக்குத்தான் வந்தோம்ன்னு சொல்றாங்க. சரி,மணமேடைக்கு போறதுக்கு முன்னால வினோதினியை ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு,ஹரீஷ் அம்மாகிட்ட, வினோதினி அம்மா சொல்றாங்க.
வினோதினி ஹரீஷ் அப்பா, அம்மா காலில் விழறா. ரெண்டு பேரும் பேசாம நிக்கறாங்க.வினோதினி என்னடா ஆசிர்வாதம் பண்ணாம இருக்காங்கன்னு அப்படியே இருக்க.ஆசீவாதம் பண்ணுங்கன்னு வினோதினி அப்பா சொல்ல
என்ன சொல்லி ஆசிர்வாதம் பண்ண சொல்றீங்க.. வேற வீட்டுக்கு மருமகளா போயி நல்லா இருன்னு சொல்லி பண்ணவா..வினோதினி எங்க வீட்டுக்கு வர வேண்டிய மருமகன்னு சொல்றார் ஹரீஷின் அப்பா.
காதலுக்கு மரியாதையில் சொன்னது மாமியார் ஸ்ரீ வித்யா.இங்க மாமானார்.அதோடயா, மாமியார் சொல்றாங்க..இவளை மாதிரி ஒரு பொண்ணை ஹரீஷுக்கு நான் எங்க போயி தேடுவேன்னு சொல்லி அழறாங்க.
என்னதான் வயசுல சின்னவங்களா இருந்தாலும் வேலைக்காரி, பராசக்தி, வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தையே மறக்காதவங்க நாங்க. இப்போ வந்த காதலுக்கு மரியாதை படத்தை மறந்துருப்போம்னு நினைக்கறீங்க...
நிலா சீரியலிலே எபிசோடுக்கு எபிசோட் ட்விஸ்ட் வைக்கறாங்கப்பா!