For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Pandian Stores Serial: முல்லை சொன்னது அவுகளுக்கு தெரியாதே...ஆவலுடன் கதிர்!

Google Oneindia Tamil News

சென்னை: கடைக்குட்டி கண்ணன் பயல் சும்மாவே இருக்க மாட்டான். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் அவனுக்கு. விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைக்குட்டி கண்ணன் நிறைய சீட்டில் ஏதேதோ எழுதி ஒரு மக்கில் போட்டுவிட்டான்.

அதை எடுங்க.. அதில் இருப்பதை செய்ங்க.. அதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க என்று ஒரு விளையாட்டையும் ஆரம்பிச்சு வச்சுட்டான். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், பாரதி கண்ணம்மா குடும்பம் இரண்டின் மெகா சங்கமம் வேற.

முல்லைக்கு வரும் சீட்டில், உங்க பார்ட்னரை எவ்ளோ பிடிக்கும்னு கேள்வி வருது...கதிர் ஆவலா முல்லையின் முகத்தை பார்த்து நிக்கறான். இவளா,சட்டுன்னு சொல்லாம கண்களை உருட்டுகிறாள்.

Kanmani Serial: கண்ணன் மாமா ட்ரீம்ஸு... நல்லாத்தேன் இருக்கு!Kanmani Serial: கண்ணன் மாமா ட்ரீம்ஸு... நல்லாத்தேன் இருக்கு!

 அவுகளை எனக்கு புடிக்கும்

அவுகளை எனக்கு புடிக்கும்

ஏற்கனவே ஒரு நாள், தனம், மீனா எல்லாரும் உட்கார்ந்து இருக்க, முல்லை கதிர் மேல் கொண்ட காதலில் அவனைப் பற்றி சிலாகித்து பேசிக்கொண்டு இருக்கிறாள்.. அப்போதுதான் ஆரம்பத்துல அவுகளை எனக்கு பிடிக்காதுதான்...போகப் போக அவுகளை புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டேன். அப்போதுதான் அவுக அருமையான குணம் தெரிஞ்சுது.

 எம்புட்டு துடிச்சு போறாக

எம்புட்டு துடிச்சு போறாக

எனக்கு ஒண்ணுன்னா அவுக எம்புட்டு துடிச்சு போறாக... இப்போ எனக்கு அவுகளை ரொம்ப புடிக்கும்...அவுகளைத் தவிர வேற யாரை கல்யாணம் பண்ணி இருந்தாலும் இம்புட்டு சந்தோஷமா இருப்பேனான்னு தெரியலை என்று முகத்தில் இயல்பான ஒரு பரவசத்தை பரவவிட்டு கூறுகிறாள் முல்லை. இது சொன்னப்போ கதிர் அங்கெ இல்லை..அதனால அவனுக்கு தெரியாது..இப்போ ஒரு எதிர்பப்ப்பில் நின்னுகிட்டு இருக்கான்.. என்ன சொல்லப் போகிறாளோ என்று.

 கதிருக்கு தெரியாதே

கதிருக்கு தெரியாதே

முல்லை எப்பவோ சொன்னது கதிருக்குத் தெரியாதே... அதனால இந்த கேள்விக்கு ஆசை காதல் மனைவி என்ன சொல்லப் போகிறாளோ என்று அவளது முகத்தை ஆர்வமாக அதே சமயம் அவளுக்கு இந்த ஆர்வம் தெரிந்துவிடக் கூடாது என்றும் பார்த்துக்கொண்டு இருக்க, அப்போதுதான் கண்களை உருட்டி பரவசமாக சிரிக்கிறாள் முல்லை. பிறகு கதிரை பார்க்கிறாள்.. கண்களை உருட்டுகிறாள்.. இதேதான் நடக்குது.

 முல்லையில் வெட்க சிரிப்பு

முல்லையில் வெட்க சிரிப்பு

சீரியலில் முல்லையின் வெட்க சிரிப்புத்தான் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். இதைத் தெரிந்துக்கொண்ட சீரியல் குழு முலையை சிரிக்க வைத்தே காலத்தை ஓட்டுகிறது. வெட்கம் மேலிட முல்லை சிரிக்கிறாள்...சொல்வதற்குள் எபிசோட் முடிஞ்சுருச்சே...கதிரைப் பற்றி என்னதான் சொல்லப் போகிறாள் முல்லை?

English summary
The last brother Kannan is not idle. He knows all things. vijay tvi's Pandian Stores serial r Kannan wrote something on a lot of cards and put it in a mug.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X