நான் கூட அதுவா இருக்குமோன்னு.. கிண்டல் பண்ணாதிய.. சிணுங்கிய முல்லை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் முதன்மை இடத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் பலர் நடித்திருந்தாலும் கதிர் முல்லைக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் படையே இருக்கிறது. சீரியலில் எப்பவுமே ஒரே வீட்டுக்குள்ளே மொத்த கதையையும் எடுத்து முடித்து விடுவார்கள்.
சுத்தி சுத்தி வீட்டுக்குள்ளேயே கதை ஓடிக்கொண்டிருப்பதால் சில ரசிகர்களுக்கு அலுத்து போயிருக்கும். அந்த அளவிற்கு இருந்தது. ஆனால் தற்போது ரசிகர்களின் மனதிற்கு மகிழ்ச்சிகரமாக கதிரும் முல்லையும் சென்னைக்கு கிளம்பி போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கத்தரி பூவழகி கரையான் பொட்டழகி.. கலரு சுவையாட்டம் உன் நினைப்பு.. உருகும் ரசிகர்கள்!
முல்லை
இவ்வளவு நாளா வீட்டுக்குள்ளேயே இவர்களின் கதையை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது புதுசா தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சூட்டில் எப்பவுமே நம்ம முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்து வீடியோக்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். அவர் பதிவிடுவதற்கு முன்பு அவருடைய ஃபேன்ஸ் அவர்களுடைய பேஜ்களில் அப்லோட் பண்ணி விடுவார்கள்.
சமத்தான முல்லை
சீரியலில் அமைதியும் சொரூபமாக இருக்கும் முல்லை, சூட்டிங் இல்லாத இடங்களில் பண்ணும் வாலுத்தனத்துக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் அந்த அளவிற்கு அவர் குழந்தைத்தனமாக செய்யும் வீடியோக்களையும் எடுக்கும் போட்டோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் அப்லோட் பண்ணி கொண்டு வருவார். அதில் கொஞ்ச நாட்களாகவே கதிரும் முல்லையும் சேர்ந்து எந்த போட்டோஸ் களிலும் இல்லாமல் இருந்தது.
முல்லையின் கண்கள்
தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் கதிர்முல்லை ஷூட்டிங் முடித்து அதில் முல்லை ஜாலியாக கலாய்த்துக் கொண்டு இருக்கும் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் கதிர் முல்லை ஃபேன்ஸ் பேஜ்களில் வைரலாக பரவி வருகிறது. ரொம்ப நாளுக்கு பிறகு அவுட்டோர் போட்டோஸ்கள் இவர்களை பார்க்கும் அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறதாம். வீட்டுக்குள்ளேயே காதல் கொண்டாடி அதுவும் கண்ணால் பேசி மௌனமாக காதல் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்த அவர்களுக்கு வெளியில் தனியாக போகிறார்கள்.
இப்பத்தான் சூடு பிடிக்குது
இப்பத்தான் கதை சூடு பிடித்திருக்கிறது என்று ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்திருக்கிறார்கள். எப்பவுமே அந்த வீட்டிற்குள் கொஞ்சம் வில்லத்தனத்தை பண்ணிக் கொண்டிருக்கும் மீனாவிற்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும் செய்தியை கூட சித்து தான் முதலில் அனைவருக்கும் தெரிவித்து இருக்கிறார். ஆண் குழந்தை பிறந்தாச்சு என்று அவர்தான் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். பல ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளையும் கூறி வருகிறார்கள்.
மறுபடியும் வருவாரா மீனா
அதன்பிறகு பல ரசிகர்களின் கேள்வி மீனா தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா என்று தான் இருந்தது .ஆனால் அதற்கு அவர் பொறுத்திருந்து பார்ப்போம் பாசிட்டிவாக தான் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் .முல்லை கதிர் ஜோடியை அடுத்து ஜீவா - மீனா கேரக்டர்தான் ரசிகர்கள் ரொம்பவும் ரசிக்கிறார்கள் . மீனா அப்பப்ப ஜீவா உடன் சேர்ந்து சண்டை போட்டாலும் சூட்டிங் இல்லாத நேரங்களில் இவர்கள் டப்ஸ்மஸ் மற்றும் கலக்கலான போட்டோஸ்கள் எடுத்து வெளியிட்டு வருவார்கள். அதனால் ரசிகர்கள் அவர்களை ரொம்பவே எதிர்ப்பார்க்கிறார்கள்.
சென்னையை நோக்கி கதிர் முல்லை
மீண்டும் தொடர்ந்து அவரே நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அதைத்தான் முல்லையும் எதிர்பார்க்கிறாராம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதிருக்கும் முல்லைக்கும் பிரச்சனை அதனால் டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளவில்லை என்றெல்லாம் ஒரு வதந்தி கிளம்பி வந்தது .அதை பொய் என்று நிரூபிக்கும் வகையில் இவர்கள் சூட்டிங் இல்லாத அவுட்டோர் போட்டோஸ்களிலும் இருவரும் சேர்ந்து போட்டோஸ் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் கதையின்படி சென்னைக்கு கிளம்பி போய்க் கொண்டிருந்தாலும் இவரது ரசிகர்களுக்கு இது ரொம்பவே கொண்டாட்டமாக இருக்கிறது.