Pandian Stores Serial: இது நிசமா நிசமில்லையா? கனவிலே... தெரியுதா...?
சென்னை: கதிர் முல்லைக்கு பிறந்த நாள் வாழ்த்து.. அதுவும் சரியா இரவு 12 மணிக்கு சொல்றானே இது நிசமா நிசம் இல்லையா?;
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிரும் முல்லையும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று சீரியல் ஆர்வலர்கள் காத்து இருக்கும் வேளையில்தான் முல்லையின் பிறந்தநாள் வந்து கூடி இருக்கிறது.
இந்த பிறந்த நாளில்தான் முல்லைக்கு கதிர் பிறந்தநாள் வாழ்த்து சொல்வானா மாட்டானா என்று சீரியல் ஆர்வலர்கள் காத்து இருக்கிறார்கள்.
முல்லைக்கு பொறந்தநாள்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பொறந்தநாள் என்று கதிரின் மூத்த அண்ணன் பாண்டியன் முல்லையை பொறந்த வீட்டில் இருந்து வீட்டுக்கு அழைச்சுட்டு வர போறார். இங்கு கதிர் முல்லைக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று கடையில் யோசிச்சுகிட்டு இருக்க, கதிருக்கு பதில் கடையில் இருப்பவங்களும் என்ன பரிசு வாங்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்காங்க.
வாழ்த்து சொல்வாகளா
அவுக இன்னிக்காவது என்கிட்டே பேசுவாகளா பொறந்தநாள் வாழ்த்து சொல்வாகளான்னு முல்லை பொறந்த வீட்டில் உட்கார்ந்து இருக்கா. பொறந்த வீட்டில் அம்மா வெறுப்பேத்திக்கிட்டு இருக்காக... சித்தி வந்து ஏண்டி உன் புருஷன் ராத்திரி 12 மணிக்கு போன் செய்து வாழ்த்து சொன்னாவளான்னு கேட்கறாக..
கதிர் 12 மணிக்கு
ராத்திரி முல்லை தங்கள் படுக்கை அறையில் இருப்பது போல்இருக்கிறது. கதிர் வருகிறான். வந்து உடையை மாற்றிக்கொண்டு படுத்து விடுகிறான். படுப்பதற்கு முன்னர் என்னாது இன்னிக்கு எங்கு பார்த்தாலும் அவ இருக்கற மாதிரியே இருக்குதுன்னு பேசிக்கறான். படுக்கையில் இருக்கும் முல்லை கோச்சுக்கிட்டு இப்பவும் விஷ் பண்ண மாட்டியளான்னு கோச்சுக்கிட்டு திரும்பி படுத்துக்கறா.
விஷ் பண்ணிடுவோம்
சரி எதுக்கும் விஷ் பண்ணி வைப்போம்னு சரியா 12 மணிக்கு எழுந்து முல்லை முல்லைன்னு எழுப்பி ஹேப்பி பார்த் டேன்னு விஷ் பன்றான் கதிர். இதை விஜய் டிவி தனது டிவிட்டர் வலை தளத்தில் பதிவிட்டு உள்ளது. இது சீரியலில் வரும் கனவா இல்லை நினைவா என்று பொறுத்திருந்து இன்று இரவு பார்க்கவும்.