கிழக்கு வாசல் கிராமத்துக்கு ரெண்டு வாசல்தானாமே... கலவரம்னா என்ன செய்ய?
சென்னை: சன் டிவியில் காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல்.
கிழக்கு வாசல் கிராமத்துல ரெண்டு தலக்கட்டு குடும்பம். அதில் நிழல்கள் ரவி குடும்பம் ஓன்று, இன்னொன்று நடிகர் ஆனந்த் குடும்பம்.
தேவராஜ் நிழல்கள்ரவி,நாகப்பன்,நடிகர் ஆனந்த்.எப்போதும் தேவராஜ் குடும்பம்தான் கோயில் திருவிழாவை எடுத்து நடத்துபவர்கள். இந்த முறை நானும் நடத்துவேன்னு நாகப்பன் நிக்கறார்.
இருவரையும் இன்ஸ்பெக்டர் அழைத்து பேசியும், பிரச்சனை முடிந்தபாடில்லை. பாதுகாப்பு அளிக்காவிட்டால் கலவரம் நடக்கும் என்று காவல் நிலையத்தில் போலீஸார் பயப்படுகிறார்கள்..
அடடே.. ராத்திரி நேரம்.. மல்லிகைப் பூவு... இன்னிக்கு செழியன் அவ்ளோதானா?
அழைத்து பேசியது புதிதாக வந்த சப் இன்ஸ்பெக்டர்.உங்களுக்கு இவங்க ரெண்டு பேர் பத்தியும் தெரியாது சார்னு மற்ற போலீசார் எச்சரிக்கிறார்கள்.ஆனால்,இன்ஸ்பெக்டர் என்ன நடக்குதுன்னு பார்த்துடலாம் என்கிற முடிவில் இருக்கார்.
டப்பிங் சீரியலா இருந்தாலும் நிழல்கள் ரவி, ஆனந்த் இருப்பதனால் வித்தியாசம் அவ்வளவாக தெரியவில்லை.நிறைய செலவு செய்து பிரகமாண்டமாக சீரியலை எடுத்திருக்கிறார்கள். தென்றல் சீரியலுக்கு பிறகு, இப்போது நிழல்கள் ரவியை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்றாலும், சீரியலில் இவருக்கு டப்பிங் குரல்தான்..சொந்த குரல் இல்லாதது ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் போல இருக்கு.